பங்குச் சந்தை வளர்ச்சியால் ஜொலிக்காத தங்க இ.டி.எப்., பங்குச் சந்தை வளர்ச்சியால் ஜொலிக்காத தங்க இ.டி.எப்., ... யுடிஐ மிட் கேப் பண்டு திட்டத்தின் பயன்கள் யுடிஐ மிட் கேப் பண்டு திட்டத்தின் பயன்கள் ...
நுகர்வோரில் பாதி பேர் சீன பொருட்களை வாங்குவதில்லை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜூன்
2021
00:45

புதுடில்லி:கடந்த 12 மாதங்களில், நாட்டில் உள்ள நுகர்வோர்களில் பாதி பேர், சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்கவில்லை என தெரிவித்துள்ளனர்.இணையதள நிறுவனமான, ‘லோக்கல்சர்க்கிள்’ மேற்கொண்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது.

இம்மாதம், 10ம் தேதி வரை, 281 மாவட்டங்களில் உள்ள, 17 ஆயிரத்து, 800 பேரிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.இது குறித்து இந்நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:ஆய்வின்போது, ‘கடந்த, 12 மாதங்களில் வாங்கிய சீன பொருட்கள் எவை’ என்ற கேள்விக்கு, சீன தயாரிப்புகள் எதையும் வாங்க வில்லை என 43 சதவீதம் பேர் தெரிவித்து உள்ளனர்.

இருப்பினும், 34 சதவீதம் பேர், ஒன்று முதல் இரண்டு பொருட்கள் வரை வாங்கியிருப்பதாக தெரிவித்தனர். 8 சதவீதம் பேர், 3 – 5 பொருட்களை வாங்கிஇருப்பதாக தெரிவித்தனர். மேலும், 4 சதவீதம் பேர், 5 – 10 பொருட்களை வாங்கி உள்ளதாக கூறினர். 6 சதவீதம் பேருக்கு, இது குறித்து எந்த அபிப்பிராயமும் இல்லை என தெரிவித்தனர்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம், எல்லையில் சீனாவின் அத்துமீறலை அடுத்து, சீன பொருட்களை வாங்கும் எண்ணம் குறைந்துள்ளது.இது ஒருபுறமிருக்க, கடந்த ஜனவரி முதல் மே மாதம் வரையிலான காலத்தில், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள், 42 சதவீதம் அதிகரித்துள்ளது.இதற்கு முக்கிய காரணம், உயிர் காக்கும் மருத்துவ சாதனங்கள் மற்றும் மருத்துவ ஆக்சிஜன்ஆகியவை அதிகளவில் இறக்குமதி செய்யப்பட்டது தான்.

மக்களிடையே வாங்கும் சக்தி குறைந்திருக்கும் நிலையில், வேறு வழியின்றி, மலிவாக கிடைக்கும் ஒரே காரணத்துக்காகவே, சீன பொருட்களை வாங்கியதாக ஆய்வில் பலர் தெரிவித்தனர்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)