பதிவு செய்த நாள்
16 ஜூன்2021
20:34
வேகமாக வளர்ந்து வரும் சிறு வணிகங்களுக்கும், நன்கு நிறுவப்பட்ட பெரிய நிறுவனங்களுக்கும் இடையில், ஒரு இனிப்பான இடத்தை, மிட் கேப் நிறுவனங்கள் வழங்க முடியும். மிட் கேப் பங்குகள் என்பது, லார்ஜ் கேப் மற்றும் ஸ்மால் கேப் பங்குகளுக்கு இடையில் இருக்கக்கூடியது. அவை பொதுவாக, நிறுவனங்களின் சந்தை மூலதனத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றன.
செபி வரையறையின்படி, சந்தை மூலதனத்தில் 101 முதல் 250 வது இடம் வரை உள்ளவை மிட் கேப் பங்குகள். பண்டின் 65 சதவீத தொகையை, மிட்கேப் நிறுவனங்களின் பங்கு மற்றும் பங்கு சார்ந்தவற்றில் முதலீடு செய்கிறது. இந்த பண்டானது அதன் பெயருக்கு ஏற்ப, எல்லா நேரத்திலும், அதன் போர்ட்போலியோவில், மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் நிறுவனங்களில், 85 முதல் 90 சதவீதத்தை ஒதுக்கீடு செய்வதை விரும்புகிறது.
இந்த பண்டு, 2021 மே 31ம் தேதி நிலவரப்படி, சுமார் 70 சதவீதத்தை மிட் கேப் நிறுவனங்களிலும், 16 சதவீதத்தை ஸ்மால் கேப் நிறுவனங்களிலும், மீதமுள்ளவற்றை லார்ஜ் கேப் நிறுவனங்களிலும் முதலீடு செய்துள்ளது. இந்த பண்டு, பல்வேறு துறைகள் மற்றும் தொழில்களை உள்ளடக்கிய சுமார், 70 பங்குகளைக் கொண்ட ஒரு பன்முகப்படுத்தப்பட்ட போர்ட்போலியோ ஆகும்.
பன்முகப்படுத்தலைக் கொண்டிருக்கும் இந்த பண்டின் நோக்கம், போர்ட்போலியோவில் இருக்கும் நிறுவனங்கள் விஷயத்தில், பொறுமையான அணுகுமுறை பின்பற்றுவதன் மூலம், ஆபத்து மற்றும் பலன் ஆகியவற்றுக்கு இடையே நிலைதடுமாறாமல் இருப்பதாகும். மேலும், இந்த போர்ட்போலியோ, மேற்கொள்ளப்பட்ட மூலதனத்தின் மீதான வருவாய் மற்றும் நல்ல பணப்புழக்கம் கொண்ட நிறுவனங்களில் சரியான கலவையில் முதலீட்டை கொண்டிருக்கும். யு.டி.ஐ., மிட் கேப் பண்டு என்பது, மிட் கேப் நிறுவனங்களில் அதிகளவு முதலீடு செய்யும் ஒரு ஓப்பன் எண்டடு ஈக்விட்டி திட்டமாகும். இந்த பண்டு, நன்கு அளவிடக்கூடிய வணிக மாதிரிகள் மற்றும் நீண்ட கால வளர்ச்சி வாய்ப்பு கொண்ட நிறுவனங்களில் முதலீடு செய்வதில் கவனம் செலுத்துகிறது. மேலும் இந்த பண்டு, பலவீனமான கட்டத்தை கடந்து செல்கிற அல்லது குறிப்பிடத்தக்க மாற்றத்தை மேற்கொள்ளும் நல்ல நிறுவனங்களில் முதலீடு செய்யத் தயாராக இருக்கும்.
இந்த பண்டு, ஏப்ரல் 7, 2004 அன்று துவங்கப்பட்டது. மே 31, 2021 நிலவரப்படி, இந்த பண்டு நிர்வகிக்கும் சொத்து மதிப்பு, 5,500 கோடி ரூபாய். மேலும் 3.60 லட்சத்துக்கும் அதிகமான முதலீட்டாளர்கள் கணக்கையும் கொண்டுள்ளது. மிட் கேப் நிறுவனங்களில் முதலீடு செய்யும் பண்டுகள், முதலீட்டாளர்களுக்கு அவர்களின் போர்ட்போலியோவை பிரித்து முதலீடு செய்வதற்கு உதவும் வகையில், பரந்த சந்தை மூலதனத்தை அணுகும் ஒரு வாய்ப்பையும், நடுத்தர அளவிலான வணிகங்களின் வளர்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பையும் வழங்குகிறது. இருப்பினும், மிட் கேப் பண்டுகளின் ஆபத்து மற்றும் பலனளிக்கும் திறன் இரண்டும், நல்ல டைவர்சிபைடு பண்டுகளை விட அதிகமாக உள்ளன, என்று யுடிஐ செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|