பதிவு செய்த நாள்
16 ஜூன்2021
22:32
புதுடில்லி:முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ், ‘கூகுள்’ நிறுவனத்துடன் இணைந்து, மலிவு விலையிலான ஸ்மார்ட்போன்களை தயாரித்து விற்பனை செய்ய இருப்பதாக அறிவித்திருந்தது.
இந்நிலையில், தற்போது இந்த முயற்சி தாமதமாகும் எனக் கருதப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம், கொரோனா பரவலுக்கு பின், ஸ்மார்ட்போன் தயாரிப்புக்கு தேவைப் படும் பொருட்கள் கிடைப்பது சிக்கலாகி இருப்பது தான்.மேலும், போன் தயாரிப்புக்கு தேவைப்படும் பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது.
இதனால் விலை மற்றும் வினியோகத்தில் சிக்கலை சந்திக்க வேண்டிய நிலை, ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.போன் தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கும், ‘சிப் மற்றும் டிஸ்பிளே’ ஆகியவை கிடைப்பது சிக்கலாகி இருக்கும் நிலையில், இந்த நிலைமை சரியாக, இன்னும் ஓராண்டுக்கும் மேல் ஆகக்கூடும் என்கிறார்கள்.
இதனால், போன் தயாரிப்பை துவங்கினாலும்கூட, திட்டமிட்டதில் சிறு பகுதி அளவுக்கே முதலில் வினியோகம் செய்ய இயலும் என்கிறார்கள்.இந்த தாமதம், சீன நிறுவனங்கள் நன்றாக கால் ஊன்றுவதற்கு வாய்ப்பளிப்பதாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|