பதிவு செய்த நாள்
16 ஜூன்2021
22:50
புதுடில்லி:பொதுவாக, சில்லரை விற்பனை பிரிவினருடன் ஒப்பிடும்போது, ‘டிஜிட்டல்’ தீர்வுகளைஏற்றுக்கொள்வதில், கார்ப்பரேட்டுகள் மெதுவாக இருப்பதாக ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அவர்களின் தேவைக்கு ஏற்ற விதத்தில், புதிய டிஜிட்டல் தீர்வை இவ்வங்கி வழங்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.தொற்று நோய் பரவலுக்கு முன்பே, கார்ப்பரேட் கடன் வளர்ச்சி வங்கிகளில் குறைவாக இருந்தது. இதையடுத்து, வங்கிகள் சில்லரை விற்பனை பிரிவில் அதிக கவனம் செலுத்த துவங்கின.
இது குறித்து, ஐ,சி.ஐ.சி.ஐ., வங்கியின் நிர்வாக இயக்குனர் விஷாகா முலே கூறியதாவது:ஒரு நல்ல நிறுவனத்துக்கு தேவைப்படும் கடனை பெறுவது என்பது, இன்று ஒரு பிரச்னை இல்லை. எங்களிடம் அதிக பணப்புழக்கம் இருந்தும், கடன் தேவைகள் அந்த அளவுக்கு இல்லை.இந்நிலையில், ‘ஐ.சி.ஐ.சி.ஐ., ஸ்டாக்’ எனும் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளோம்.
இது கார்ப்பரேட்டு களுக்கும் அவற்றின் பங்கு தாரர்கள், கூட்டாளிகள், ஊழியர்கள் ஆகியோருக்கு டிஜிட்டல் வங்கி தீர்வுகளை வழங்குவதாக இருக்கும்.இந்த தளத்தின் வாயிலாக, துவக்கத்தில், 15 துறைகளுக்கு சேவைகள் கிடைக்கும்.இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|