பதிவு செய்த நாள்
16 ஜூன்2021
22:55
புதுடில்லி:கடந்த நிதியாண்டில், 619 கோடி ரூபாய் மதிப்பிலான வாழைப்பழ ஏற்றுமதி நடைபெற்றுள்ளதாக, மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த நிதியாண்டில், 619 கோடி ரூபாய் மதிப்பிலான, 1.91 லட்சம் டன் வாழைப்பழங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளன.கடந்த, 2019 – 20ம் நிதியாண்டில், 660 கோடி ரூபாய்க்கும்; இதற்கும் முந்தைய நிதியாண்டில், 413 கோடி ரூபாய் அளவுக்கும் ஏற்றுமதி ஆகியுள்ளது.
கடந்த சில நிதியாண்டுகளாக, வாழைப்பழ ஏற்றுமதி குறிப்பிடத்தக்க வளர்ச்சி கண்டு வருகிறது. இந்த போக்கு, நடப்பு நிதியாண்டிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலக அளவிலான தரத்தை ஏற்று விளைவிப்பதால், இந்த வளர்ச்சி சாத்தியமாகி இருப்பதாக அமைச்சகம் தெரிவித்து உள்ளது.இந்தியாவில் மொத்த வாழைப்பழ விளைச்சலில், 25 சதவீதம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, மஹாராஷ்டிரா, குஜராத், மத்திய பிரதேசம், பீஹார் ஆகிய மாநிலங்கள், மொத்த விளைச்சலில், 70 சதவீத பங்கை வகிக்கின்றன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|