பதிவு செய்த நாள்
17 ஜூன்2021
19:53
மும்பை:நாட்டின் பொருளாதார வளர்ச்சி, நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், மைனஸ் 12 சதவீதமாக வீழ்ச்சி காணும் என, ‘யு.பி.எஸ்., செக்யூரிட்டீஸ்’ நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:கொரோனா பாதிப்பால், கடந்த ஆண்டில் இதே காலாண்டில் வளர்ச்சி, மைனஸ் 23.9 சதவீதமாக இருந்தது. இப்போது இரண்டாவது அலை காரணமாக, மைனஸ் 12 சதவீதமாக சரிவை காணும் என கருதுகிறோம்.
இருப்பினும், கடந்த முறை, மைனஸ் 23.9 சதவீதம் அளவுக்கு சரிவை கண்டாலும், இறுதியில், மைனஸ் 7.3 சதவீதம் அளவுக்கு வேகமாக மீட்சியை கண்டது.ஆனால், இப்போது இந்த, ‘வி’ வடிவ மீட்சி இருக்குமா என்பது சந்தேகமே. முதல் அலையின் தாக்கம் குறைந்ததும், ஊரடங்கு உத்தரவுகள் விலக்கப்பட்டன. இதையடுத்து, தேவைகள் அதிகரிப்பின் காரணமாக, ஆங்கில எழுத்தான, ‘வி’ வடிவில் மீட்சி இருந்தது.
ஆனால் இரண்டாவது அலையில், நுகர்வோர் நம்பிக்கை குறைவாக இருக்கிறது. கடந்த முறையை விட, இம்முறை மக்கள் மிகவும் கவலை கொண்டிருக்கிறார்கள். எனவே இம்முறை, ‘வி’ வடிவ மீட்சி இருக்காது. படிப்படியாக தான் பொருளாதாரம் மீட்சியடையும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|