பதிவு செய்த நாள்
22 ஜூன்2021
06:33
புதுடில்லி : ‘சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, இந்தியன் ஓவர்சீஸ் பேங்க்’ ஆகிய இரண்டு வங்கிகளையும் முதலில் தனியார்மயமாக்க, மத்திய அரசு தேர்ந்தெடுத்துள்ளதாக, வங்கி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மத்திய அரசு, நடப்பு நிதியாண்டில், பங்கு விலக்கல் நடவடிக்கைகள் வாயிலாக, 1.75 லட்சம் கோடி ரூபாய் திரட்ட இலக்கு வைத்துள்ளது.இதன் தொடர்ச்சியாக, இரண்டு பொதுத்துறை வங்கிகள், ஒரு பொதுக் காப்பீட்டு நிறுவனம், ஏர் இந்தியா, பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா போன்ற பொதுத்துறை நிறுவனங்களில், பங்கு விலக்கலை மேற்கொள்ளும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
இதில், பொதுத்துறை வங்கிகளை பொறுத்தவரை, சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் ஆகியவற்றை தனியார் மயமாக்க தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இந்த வங்கிகளில் அரசு தன் வசம் இருக்கும் பங்குகளில், 51 சதவீதத்தை, முதல் கட்டமாக விற்பனை செய்ய உள்ளது.இத்தகவலை அடுத்து, நேற்று இந்த இரு வங்கிகளின் பங்குகள் விலையும் கிட்டத்தட்ட, 20 சதவீதம் அளவுக்கு அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|