பதிவு செய்த நாள்
23 ஜூன்2021
21:41
மும்பை:குடும்பங்களின் நிதி சேமிப்பு, கடந்த நிதியாண்டில், டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 8.2 சதவீதமாக மதிப்பிடப்பட்டுள்ளது என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மேலும் தெரிவித்துஉள்ளதாவது:
கொரோனா முதல் அலை பாதிப்பு காரணமாக, குடும்பத்தின் நிதி சேமிப்பு, மூன்றாவது காலாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 8.2 சதவீதமாக குறைந்தது. இது, இரண்டாவது காலாண்டில், 10.4 சதவீதமாக இருந்தது. மேலும், குடும்பத்தின் வங்கி டிபாசிட்டுகள் விகிதம், செப்டம்பர் காலாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 7.7 சதவீதமாக இருந்தது, டிசம்பர் காலாண்டில், 3 சதவீதமாக குறைந்துவிட்டது.
குடும்பத்தின் கடன், கடந்த 2019ம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. டிசம்பர் காலாண்டில் இந்த விகிதம், 37.9 சதவீதமாக அதிகரித்துள்ளது. தரவுகளின்படி, மதிப்பீட்டு காலாண்டில் டிபாசிட்டுகள், பங்குச் சந்தை, மியூச்சுவல் பண்டு முதலீடுகள், பணம், சிறுசேமிப்பு, பென்சன் பண்டு போன்றவை உள்ளிட்ட நிதி சொத்துக்களின் மதிப்பு, 6.93 லட்சம் கோடி ரூபாயாக இருக்கிறது. கடன்களை பொறுத்தவரை, 2.48 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.இவ்வாறு ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|