‘டிவி’ செயலிகளில் ஆதிக்கம் ‘கூகுள்’ மீது விசாரணை ‘டிவி’ செயலிகளில் ஆதிக்கம் ‘கூகுள்’ மீது விசாரணை ...  ‘பில்கேட்ஸ்’ அறக்கட்டளையிலிருந்து வாரன் பபெட் திடீர் விலகல் ‘பில்கேட்ஸ்’ அறக்கட்டளையிலிருந்து வாரன் பபெட் திடீர் விலகல் ...
வர்த்தகம் » சந்தையில் புதுசு
புதிய போன், மாபெரும் தொழிற்சாலைகள் முகேஷ் அம்பானியின் அறிவிப்புகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜூன்
2021
21:25

மும்பை:‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ நிறுவனத்தின், 44வது ஆண்டு பொதுக்குழு கூட்டம், நேற்று நடைபெற்றது. கொரோனா தொற்று பரவல் காரணமாக கூட்டம், காணொலி வாயிலாக நடைபெற்றது.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஆண்டு பொதுக் குழு கூட்டம், மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒரு நிகழ்ச்சியாகும். காரணம், நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, பல முக்கிய அறிவிப்புகளை, இந்த கூட்டத்தின் போது தான் அறிவிப்பார். இதற்கேற்ப பல தரப்பினரின் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் வகையில், பல்வேறு அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.

குறிப்பாக, மிகவும் எதிர்பார்க்கப்படும், புதிய மலிவு விலையிலான ‘ஸ்மார்ட்போன்’ அறிமுகம் குறித்தும் தெரிவித்தார்.முகேஷ் அம்பானியின் உரையிலிருந்து சில முக்கிய அம்சங்கள்:

* ‘5ஜி’ சேவைக்காக, ‘கூகுள் கிளவுட்’ உடன், ‘ஜியோ’ இணைந்து, இந்தியாவின் டிஜிட்டல் தளத்துக்கு அடித்தளம் அமைத்துள்ளது.

* ஜியோ, 5ஜி சேவைக்காக, கூகுள் கிளவுட் தொழில்நுட்பத்தை பயன்படுத்திக் கொள்ளும்

* ஜியோ 1 ஜி.பி.பி.எஸ்., வேகத்திலான 5ஜி சேவையை பரிசோதித்துள்ளது

* இந்தியாவில், முழுமையான 5ஜி சேவையை அறிமுகப்படுத்தும் முதல் நிறுவனமாக, ஜியோ இருக்கும்

* கூகுள் நிறுவனத்துடன் இணைந்து, ‘ஜியோபோன் நெக்ஸ்ட்’ எனும், ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போனை, செப்டம்பர் மாதம் 10ம் தேதியன்று அறிமுகம் செய்ய உள்ளது

* சவுதி அரேபியாவின், ‘அராம்கோ’ நிறுவனத்தின் தலைவர் யாசிர் அல்ருமேயன், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிர்வாக குழுவில், செயல் சாரா இயக்குனராக இணைகிறார்

* அரோமாவுடனான ரிலையன்ஸ் கூட்டு குறித்த விஷயங்கள் இவ்வாண்டில் முடிவாகும்

* இது, ரிலையன்ஸ் நிறுவனத்தின் உலகளாவிய ஆரம்ப முயற்சியாகும்

* ரிலையன்ஸ், புதிய எரிசக்தி வணிகத்தை தொடங்கி, திருபாய் அம்பானி பசுமை எரிசக்தி வளாகத்தை உருவாக்க உள்ளது

* இந்த புதிய எரிசக்தி வணிகத்தில், மொத்த முதல்கட்ட முதலீடு, 75 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கும்

* எரிசக்தி துறையில், நான்கு பிரிவுகளில் மிகப்பெரும் தொழிற்சாலைகள் துவக்கப்படும்.

உலகிலேயே மலிவான போன்

‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ நிறுவனம், செப்டம்பர் 10 தேதியன்று, ‘ஜியோபோன் நெக்ஸ்ட்’ புதிய ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது.‘ஜியோ’ நிறுவனம் கூகுளுடன் இணைந்து, இந்த ஸ்மார்ட்போனை தயாரிக்கிறது.“இந்தியாவில் மட்டுமல்ல; உலகி லேயே, இது தான் மிகவும் விலை மலிவான ஸ்மார்ட்போனாக இருக்கும்” என்று, முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

ஒரு ஸ்மார்ட் போனுக்கான அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய, ‘ஆண்ட்ராய்டு’ போனாக இது இருக்கும்.முதலில் இந்தியாவிலும், பின்னர் உலகெங்கும் அறிமுகம் செய்யப்படும் என்றும் அம்பானி தெரிவித்துள்ளார்.இந்த முயற்சி இந்தியாவில், ‘2ஜி’ பயன்பாட்டாளர்களை, ‘4ஜி’ தொழில்நுட்பத்துக்கு உயர்த்தும் ஒரு முயற்சியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.விலை உள்ளிட்ட விபரங்கள் இனிமேல் தான் வெளியாகும்.

Advertisement

மேலும் சந்தையில் புதுசு செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)