பதிவு செய்த நாள்
28 ஜூன்2021
01:55
நான்கு
ஆண்டுகளாக, ஒரு வங்கியில் சம்பளக் கணக்கு வைத்திருந்தேன்.
அதிகமான ரொக்கப் பரிவர்த்தனை செய்ததாக என் கணக்கை
முடக்கிவிட்டனர். என்ன செய்ய வேண்டும்?
ஆர்.ஜெயந்தி, சென்னை.
வங்கிக்
கிளைக்கு போய், கணக்கை புதுப்பிக்க என்ன வழி என்பதை விசாரியுங்கள்.
பெரும்பாலும் இதற்கென்று உள்ள படிவத்தை பூர்த்தி செய்து, ‘பான்’ அட்டை
நகலை இணைத்து, மனு கொடுக்க வேண்டி இருக்கலாம்.அதிகமான ரொக்கப் பரிவர்த்தனை ஏன் செய்தீர்கள் என்பதற்கு நியாயமான காரணங்களைத் தெரிவியுங்கள். வங்கி ஏற்கலாம்.
பைக்
வாங்கி, 18 மாதங்கள் தவணை கட்டினேன். தனிநபர் கடன் வாங்கி அதையும்
கட்டி முடித்துவிட்டேன். தடையில்லா சான்று கேட்டால், தராமல் இழுபறி
செய்கிறார்கள். என்ன செய்ய?
மு.பாலசுப்ரமணியன், மதுரை.
மாதத்
தவணை செலுத்தும்போது, ஒரு சில தவணைகளில், ஒரு சில நாட்கள் தாமதம்
ஏற்பட்டிருக்கலாம். அதற்கு வட்டி போட்டு, நீங்கள்
செலுத்துவதற்காக காத்திருப்பர். அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை
என்றால், இந்த வலைதளத்துக்கு (https://www.consumercomplaints.in/)
போய், வங்கியின் பெயரை, ‘டேக்’ செய்து புகார் எழுதுங்கள். விரைந்து
பதில் சொல்கிறார்கள்.
என்னிடம், பழைய அரிதான ரூபாய் நோட்டுகள், நாணயங்கள் உள்ளன. அதை எங்கு மாற்றுவது?
விஷால், கோவை.
இந்திய ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் உள்ள தனிப்பிரிவுக்குபோய்
கேளுங்கள். அவர்கள் மாற்றித் தருவர். மிக மிக அரிய நாணயங்களுக்கு
பெரிய மவுசு இருக்கிறது. இணைய வணிக வலைதளங்களில், அரிய நாணயங்களை
புகைப்படம் எடுத்து வலையேற்றம் செய்யுங்கள். அவற்றுக்கு நல்ல விலை கிடைக்கலாம்.
ஒரு
வங்கியில், அடமானக் கடன் பெற்றேன். வட்டி 16 சதவீதம். வட்டி
விகிதங்களை முன்பு சொல்லவில்லை. இப்போது கேட்டால் சரியான விளக்கம்
இல்லை. இரண்டு ஆண்டுகளாக தவணை செலுத்தி வருகிறேன். இதற்கு ரிசர்வ் வங்கியில் புகார் செய்ய முடியுமா?
சி.ரமேஷ், திருப்பூர்.
வட்டி
எவ்வளவு என்று தெரியாமல் எப்படி கடன் வாங்கி னீர்கள்? எப்படி 2
ஆண்டுகளாக
தவணைத் தொகையை செலுத்தி வருகிறீர்கள்? இதெல்லாம் தெரியவில்லை என்று
சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள்.நீங்கள்
கையெழுத்திட்டுக் கொடுத்துள்ள
ஆவணங்களிலேயே வட்டி விகித விபரம்
இருக்குமே? எந்த அமைப்பும் உங்கள் புகாரை
எடுத்துக்கொள்ளாது.
என்னுடைய வங்கி ‘டெபிட் கார்டு’ திடீரென்று, ‘அன்-ஆதரைஸ்டு’ என்று வருகிறது.
என்னவாக இருக்கும்?
கணேஷ்குமார், சிவகாசி.
உங்கள்
மொபைல் எண், வங்கியில் பதிவுசெய்யப்படாமல் இருக்கலாம். வங்கி
உங்கள் டெபிட் கார்டை தடை செய்திருக்கலாம். 24 மாதங்களாக பயன்படுத்தவில்லை
என்றால்,
உங்கள் வங்கிக் கணக்கு, ‘டார்மென்ட்’ ஆகிவிடும். 21
மாதங்கள் பயன்படுத்தவில்லை
என்றால், ‘இன்ஆக்டிவ்’ ஆகிவிடும்.
‘பான்’ எண் விபரங்களைப் பதியவில்லை என்றாலும் இந்தப் பிரச்னை வரும்.அல்லது,
இந்த மாதத்திலேயே அனுமதிக்கப்பட்ட 4 முறைக்கு மேல் பணம் எடுக்க
முயற்சி செய்திருப்பீர்கள். அதனாலும், ‘அன் ஆதரைஸ்டு’ செய்தி
வரக்கூடும்.
என் மனைவி பெயரில் ஒரு நிறுவனத்தின் பங்குகள்
உள்ளன. ஆனால் மூல சான்றிதழ்கள் எங்கோ தொலைந்துவிட்டன. நகல் வாங்க
யாரை அணுக வேண்டும்?
கே. அய்யாதுரை, அம்பத்துார்.
உடனடியாக,
அந்த நிறுவனத்துக்கு, ‘இ – மெயில்’ வாயிலாகவோ, கடிதம் வாயிலாகவோ,
‘ஷேர் சர்டிபிகேட்’ தொலைந்த விபரத்தை தெரிவிக்கவும்.பின்னர், 500 ரூபாய், ‘நான் ஜூடிஷியல்’ ஸ்டாம்ப் பேப்பரில், ‘இண்டெம்னிட்டி பாண்டு’, 100 ரூபாய், ‘அபிடவிட்’ ஆகியவற்றை நிறுவனத்திடம் தாக்கல் செய்வதோடு, காவல்துறையில் புகாரளித்து, முதல் தகவல் அறிக்கை பெற வேண்டும்.ஷேர் சர்டிபிகேட் தொலைந்து விட்டது என்பதை பத்திரிகையில் விளம்பரமாக கொடுக்கவேண்டும். ஷேர் சர்டிபிகேட்கொடுத்த நிறுவனம், உங்களது ஆவணங்களைப் பரிசீலனை செய்து, நகல் சான்றிதழ் வழங்கும்.
நான்,
‘எஸ்ஸார் ஆயில்’ நிறுவன பங்குகளை வைத்துள்ளேன். பங்குச் சந்தையில்
இந்த
நிறுவனம் இல்லை என தெரிய வருகிறது. பணத்தை வாங்குவது எப்படி?
எஸ். கார்த்திகேயன், தேனி.
‘எஸ்ஸார் ஆயில்’ நிறுவனத்தை, ஒரு ரஷ்ய நிறுவனம் வாங்கி தற்போது அது ‘நயாரா எனர்ஜி’ என்ற பெயரில் இயங்குகிறது.முதலில்
பதிவாளரை அணுகி, உங்கள் பங்கு
பத்திரத்தை, ‘டிமேட்’ வடிவத்துக்கு
மாற்றிக்கொள்ளுங்கள். அப்போது அது, ‘நயாரா எனர்ஜி’ பங்குகளாக
கிடைக்கும்.
தனியார் வங்கிகளில் நிரந்தர வைப்பு
பாதுகாப்பானதா? திவால், அல்லது வேறு காரணங்களுக்காக வங்கி
மூடப்பட்டால் தொகை திரும்ப கிடைக்குமா? தனியார் வங்கி, அரசு வங்கி
இவற்றில் எதில் முதலீடு செய்யலாம்?
சுரேஷ், மதுரை.
இந்தியாவில்,
அரசு அல்லது தனியார் வங்கிகளில் செய்யப்படும் நிரந்தர வைப்பு,
தொடர் வைப்பு, சேமிப்பு அல்லது நடப்புக் கணக்கு ஆகிய அனைத்துக்கும், 5
லட்சம் ரூபாய் வரை டிபாசிட் காப்பீடு உண்டு.இங்கே வங்கிகள்
திவாலாக அனுமதிக்கப்படுவதில்லை. சிரம திசையில் இருக்கும் பல
வங்கிகள், பெரிய வங்கிகளோடு இணைக்கப்பட்டு,
முதலீட்டாளர்களின்
பணத்துக்கு உத்தரவாதம் அளிக்கப்படுகிறது.
வங்கியல்லாத நிதி
நிறுவனங்கள், வீட்டுக்கடன் நிறுவனங்கள், கார்ப்பரேட்
நிறுவனங்கள் பெறும் முதலீடுகளுக்கு இந்தப் பாதுகாப்பு கிடையாது.
வட்டி விகிதங்களைப் பொறுத்தும் உங்கள் தேவையைப் பொறுத்தும், எந்த
வங்கியில் முதலீடு செய்வது என்பதை முடிவுசெய்து கொள்ளுங்கள்.
வாசகர்களே, நிதி சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை, ‘இ--–மெயில்’ மற்றும் ‘வாட்ஸ் ஆப்’ வாயிலாக அனுப்பலாம்.
ஆயிரம் சந்தேகங்கள்
தினமலர், 39, ஒயிட்ஸ் சாலை, சென்னை – 600 014
என்ற நமது அலுவலக முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவும் அனுப்பலாம். கேள்விகளைச் சுருக்கமாக தமிழில் கேட்கவும்.
ஆர்.வெங்கடேஷ்,
pattamvenkatesh@gmail.com
98410 53881
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|