பதிவு செய்த நாள்
30 ஜூன்2021
20:09
புதுடில்லி:கொரோனா தொற்று நோயின் தாக்கத்தை அடுத்து, இந்திய செல்வந்தர்கள் பலர், துபாயில் வீடுகளை வாங்கி இருக்கின்றனர்.இவர்கள், துபாய் ரியல் எஸ்டேட் சந்தையில், கடந்த 5 மாதங்களில், 12 ஆயிரத்து, 162 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளனர்.
குறைவான வரி, உடனடியாக வசிப்பதற்கு ஏற்ப வீடுகள் கிடைப்பது, நாட்டில் நிலவும் சர்வ தேச வாழ்க்கை முறை, இந்தியாவிலிருந்து குறைவான துாரம் ஆகிய காரணங்களால், பலர் இங்கு முதலீடு செய்துள்ளனர். துபாயில் குறைந்தபட்சம் 2 கோடி ரூபாயை ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யும்பட்சத்தில், மூன்று ஆண்டுகளுக்கு, ‘ரெசிடன்சி விசா’ கிடைத்துவிடும்.
இதுவே போர்ச்சுக்கல், ஸ்பெயின் போன்ற நாடுகளில் எனில், குறைந்தபட்சம் 4.5 கோடி ரூபாய் தேவைப்படும். துபாயில் கொரோனா தடுப்பு பணிகள் சிறப்பாக இருப்பதாக கருதி, இந்த இக்கட்டான காலத்தில், அங்கே தற்காலிகமாக வசிக்க விரும்பி, பலர் முதலீட்டை மேற்கொண்டிருக்கிறார்கள். கொரோனா காலத்தில் பிரிட்டன், சீனாவில் இருப்பவர்களை விட இந்தியர்களே, துபாயில் அதிகம் முதலீடு செய்துள்ளனர்.
மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|