பதிவு செய்த நாள்
30 ஜூன்2021
20:23
நாடு முழுவதும் அதிகரிக்கும் பிராணவாயு தேவையை நிறைவு செய்யும் முனைவாக ஆந்திராவைச் சேர்ந்த மெட்டெக் ஜோன் லிமிடெட் (ஏஎம்டிஇசட்) நிறுவனத்துடனான கூட்டாண்மை குறித்த அறிவிப்பை ஊபர் வெளியிட்டது.
வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ள கோவிட் உறுதியான நோயாளிகளுக்கு ஓ2 ஹோம் ஆப் செயலி மூலம் பிராணவாயு செறிவூட்டிகள் தினசரி ரூ 300/- முதல் ரூ 400/- என்ற குறைந்த கட்டணத்தில் ஏஎம்டிஇசட் வாடகைக்கு வழங்கிவருகிறது. இந்த திட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையில் ஊபரின் இலவசப் போக்குவரத்து வழங்க இந்த கூட்டாண்மை உதவும்.
பிராணவாயு செறிவூட்டிகளை வசதியான, வேகமான, பாதுகாப்பான முறையில் சம்மந்தப்பட்டவர்களின் வீட்டிலேயே வழங்குவதன் மூலம் பல உயிர்கள் காப்பாற்றப்படும். கோவை, விசாகப்பட்டினம், லக்னௌ, ஐதராபாத், இந்தூர், கெளஹாதி, நாக்பூர், பூபனேஸ்வர், பெங்களூரு, பூனே, ஜெய்பூர், ராய்பூர் உள்ளிட்ட இந்தியாவின் 12 நகரங்களில் இச்சேவை வழங்கப்பட்டு வருகிறது.
கூட்டாண்மை குறித்து ஊபர் இந்தியா அண்ட் தெற்கு ஆசியா தலைவர் பிரப்ஜீத் சிங்க் கூறுகையில் ‘உயிர் காக்கும் முனைவுக்கு உதவும் ஏஎம்டிஇசட் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவது மகிழ்ச்சி தருகிறது. கோவிட் இரண்டாம் அலை காரணமாக ஏற்பட்டுள்ள பிராணவாயு தேவையை நிறைவு செய்ய எங்கள் முனைவுகள் உதவுவதுடன், நிபுணர்கள் கணிப்பதாகச் சொல்லப்படும் மூன்றாம் அலையை சமாளிக்க நாட்டை தயார் படுத்துவதிலும் உறுதுணையாக இருப்போம். இந்தியாவின் சுகாதாரப் பாதுகாப்பு கட்டமைப்பை போக்குவரத்து வலையமைவு மூலம் தொடர்ந்து வலுப்படுத்தி இந்தியாவை வளர்ச்சிப் பாதைக்கு மீட்டெடுப்போம்’ என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|