கிரானிடோவின் கிரிஸ்டல் செராமிக்ஸ் விரிவாக்க பணிகள் நிறைவுகிரானிடோவின் கிரிஸ்டல் செராமிக்ஸ் விரிவாக்க பணிகள் நிறைவு ...  பெண்களிடம் தவறான அணுகுமுறை பில்கேட்சை சுற்றும் சர்ச்சைகள் பெண்களிடம் தவறான அணுகுமுறை பில்கேட்சை சுற்றும் சர்ச்சைகள் ...
மெட்டெக் நிறுவனத்துடன் ஊபர் கூட்டாண்மை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜூன்
2021
20:23

நாடு முழுவதும் அதிகரிக்கும் பிராணவாயு தேவையை நிறைவு செய்யும் முனைவாக ஆந்திராவைச் சேர்ந்த மெட்டெக் ஜோன் லிமிடெட் (ஏஎம்டிஇசட்) நிறுவனத்துடனான கூட்டாண்மை குறித்த அறிவிப்பை ஊபர் வெளியிட்டது.

வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ள கோவிட் உறுதியான நோயாளிகளுக்கு ஓ2 ஹோம் ஆப் செயலி மூலம் பிராணவாயு செறிவூட்டிகள் தினசரி ரூ 300/- முதல் ரூ 400/- என்ற குறைந்த கட்டணத்தில் ஏஎம்டிஇசட் வாடகைக்கு வழங்கிவருகிறது. இந்த திட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையில் ஊபரின் இலவசப் போக்குவரத்து வழங்க இந்த கூட்டாண்மை உதவும்.

பிராணவாயு செறிவூட்டிகளை வசதியான, வேகமான, பாதுகாப்பான முறையில் சம்மந்தப்பட்டவர்களின் வீட்டிலேயே வழங்குவதன் மூலம் பல உயிர்கள் காப்பாற்றப்படும். கோவை, விசாகப்பட்டினம், லக்னௌ, ஐதராபாத், இந்தூர், கெளஹாதி, நாக்பூர், பூபனேஸ்வர், பெங்களூரு, பூனே, ஜெய்பூர், ராய்பூர் உள்ளிட்ட இந்தியாவின் 12 நகரங்களில் இச்சேவை வழங்கப்பட்டு வருகிறது.

கூட்டாண்மை குறித்து ஊபர் இந்தியா அண்ட் தெற்கு ஆசியா தலைவர் பிரப்ஜீத் சிங்க் கூறுகையில் ‘உயிர் காக்கும் முனைவுக்கு உதவும் ஏஎம்டிஇசட் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவது மகிழ்ச்சி தருகிறது. கோவிட் இரண்டாம் அலை காரணமாக ஏற்பட்டுள்ள பிராணவாயு தேவையை நிறைவு செய்ய எங்கள் முனைவுகள் உதவுவதுடன், நிபுணர்கள் கணிப்பதாகச் சொல்லப்படும் மூன்றாம் அலையை சமாளிக்க நாட்டை தயார் படுத்துவதிலும் உறுதுணையாக இருப்போம். இந்தியாவின் சுகாதாரப் பாதுகாப்பு கட்டமைப்பை போக்குவரத்து வலையமைவு மூலம் தொடர்ந்து வலுப்படுத்தி இந்தியாவை வளர்ச்சிப் பாதைக்கு மீட்டெடுப்போம்’ என்றார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)