பதிவு செய்த நாள்
01 ஜூலை2021
20:40
புதுடில்லி:நாடு முழுக்க உள்ள சுங்கச் சாவடிகளில், ‘பாஸ்டேக்’ வாயிலான வசூல், ஜூன் மாதத்தில் 21 சதவீதம் அதிகரித்துள்ளது.
கொரோனா தாக்கம் குறைந்து வருவதை அடுத்து, பல மாநிலங்கள், ஊரடங்கு கட்டுப்பாடு களில் தளர்வுகளை அறிவித்து வருகின்றன. இதன் காரணமாக, சுங்கச் சாவடிகளில் பாஸ்டேக் வாயிலான வசூல், ஜூன் மாதத்தில், அதற்கு முந்தைய மே மாதத்தை விட 21 சதவீதம் அதிகரித்து உள்ளது.
கடந்த ஜூன் மாதத்தில் வசூல் 2,576 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. பாஸ்டேக் பரிவர்த்தனையும், மே மாதத்தில் 11.65 கோடியாக இருந்தது, ஜூனில் 15.79 கோடியாக அதிகரித்துள்ளது.வசூல் தொகை, மே மாதத்தை விட அதிகமாக இருந்தாலும், கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களை விட குறைவாகவே உள்ளது.
சுங்கச் சாவடி கட்டண வசூலில் 95 சதவீதம், பாஸ்டேக் வாயிலாகவே வசூலாகி வருகிறது. கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து, பாஸ்டேக் கட்டாயம் என அரசால் அறிவிக்கப்பட்டது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|