பதிவு செய்த நாள்
01 ஜூலை2021
20:46
புதுடில்லி:‘ஜி.ஆர்., இன்ப்ராபுராஜெக்ட்ஸ்’ நிறுவனம், வரும் 7ம் தேதியன்று, புதிய பங்கு வெளியீட்டுக்கு வரவுள்ளதாகவும்; பங்கின் விலை 828 – 837 ரூபாயாக இருக்கும் என்றும் அறிவித்துள்ளது.
ந்நிறுவனம், பங்கு வெளியீட்டின் வாயிலாக 963 கோடி ரூபாய் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது. இதன் பங்கு வெளியீடு 7ம் தேதி துவங்கி, 9ம் தேதியன்று முடிவடைகிறது. துணிகர முதலீட்டாளர்களுக்கான வெளியீடு 6ம் தேதி துவங்குகிறது.இந்த பங்கு வெளியீட்டில், முழுக்க பங்குதாரர்கள், முதலீட்டாளர்கள் ஆகியோரின் பங்குகளே விற்பனை செய்யப்பட உள்ளன.
மொத்தம் 1.15 கோடி பங்குகள் விற்பனை செய்யப்பட உள்ளன.இந்நிறுவனம் இப்போது, மூன்றாவது முறையாக பங்கு வெளியீட்டுக்கு முயற்சிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனம், உதய்பூரை அடிப்படையாக கொண்டு செயல்பட்டு வருகிறது. நாட்டின் 15 மாநிலங்களில், சாலை பணிகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|