பதிவு செய்த நாள்
01 ஜூலை2021
20:48
புதுடில்லி:கடந்த ஜூன் மாதத்தில் நாட்டின் வாகன விற்பனை ஏற்றம் கண்டுள்ளது. கொரோனா தொடர்பான ஊரடங்குகள் தளர்த்தப்பட்டதை அடுத்து, முகவர்களுக்கு வாகனங்களை அனுப்புவது எளிதானதால், விற்பனை அதிகரித்து உள்ளது.
நாட்டின் மிகப் பெரிய வாகன தயாரிப்பு நிறுவனமான, ‘மாருதி சுசூகி’ நிறுவனத்தின் விற்பனை, கடந்த மே மாதத்துடன் ஒப்பிடும்போது, மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. மே மாதத்தில் 46 ஆயிரத்து 555 வாகனங்களை விற்பனை செய்திருந்த நிலையில், ஜூன் மாதத்தில் 1.47 லட்சம் வாகனங்களாக அதிகரித்துள்ளது. ஏற்றுமதியும் அதிகரித்துள்ளது.
‘டாடா மோட்டார்ஸ்’ விற்பனை 78 சதவீதம் அதிகரித்துள்ளது. நிறுவனத்தின் வர்த்தக வாகனங்களின் விற்பனையும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதே போல், ‘ஹூண்டாய் மோட்டார் இந்தியா’ நிறுவனத்தின் விற்பனையும் 77 சதவீதம் அதிகரித்து உள்ளது.
‘டொயோட்டா கிர்லோஸ்கர்’ விற்பனை கிட்டத்தட்ட 13 மடங்கு அதிகரித்துள்ளது. ‘அசோக் லேலாண்டு’ விற்பனை, இரு மடங்கு அதிகரித்திருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இருசக்கரம் மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும், ‘பஜாஜ் ஆட்டோ’ நிறுவனத்தின் விற்பனை 24 சதவீதம் அதிகரித்துஉள்ளது.ஜூன் மாதத்தில் மொத்தம் 3.46 லட்சம் வாகனங்களை விற்பனை செய்துள்ளது.
டிராக்டர் விற்பனையும் அதிகரித்துள்ளது. ‘எஸ்கார்ட்ஸ்’ நிறுவனத்தை பொறுத்தவரை, டிராக்டர் விற்பனையும், வேளாண் இயந்திரங்கள் விற்பனையும், ஜூன் மாதத்தில் அதிகரித்திருப்பதாக தெரிவித்துள்ளது. ‘மகிந்திரா அண்டு மகிந்திரா’ டிராக்டர் விற்பனையும் அதிகரித்துள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|