பதிவு செய்த நாள்
04 ஜூலை2021
18:48
இந்திய ‘டிஜிட்டல்’ பொருளாதாரம், 2030ம் ஆண்டில் 10 மடங்கு வளர்ச்சி அடைந்து, 800 பில்லியன் டாலர் மதிப்புள்ள சந்தையாக உருவாகும் என, ஆய்வில் தெரிய வந்துள்ளது.
ஆலோசனை நிறுவனமான ‘ரெட்சீர்’ வெளியிட்டுள்ள அறிக்கையில், டிஜிட்டல் பொருளாதாரம், பயணம், மளிகை அல்லாத பொருட்கள், கல்வி, மருந்துகள் மற்றும் உணவு பொருட்களை கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தற்போது, 85 முதல் 90 பில்லியன் டாலராக இருக்கும் இந்த பிரிவு, 2030ல் 800 பில்லியன் டாலர் மதிப்பை அடையும் என்றும், இணைய சில்லரை விற்பனை மூன்றாவது மிகப்பெரிய சந்தையாக உருவாகும் என்றும் இந்த அறிக்கை தெரிவிக்கிறது.
கடந்த 10 ஆண்டுகளில் இந்திய நுகர்வோருக்கான குறிப்பிட்ட பிரச்னைகளை தீர்ப்பதில் தொழில் முனைவோர் ஆர்வம் காட்டி வருவது, டிஜிட்டல் பொருளாதாரம் வளர்வதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக அமைந்துள்ளது.
மேலும், நுகர்வோரில் 50 சதவீதத்திற்கு மேலானவர்கள், ‘ஆன்லைன் ஷாப்பிங்’ அளிக்கும் வசதி காரணமாக அதை நாடுவதாக தெரிவித்துள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன், தள்ளுபடி காரணமாகவே பலரும் ஆன்லைன் ஷாப்பிங்கை நாடுவது வழக்கமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|