பதிவு செய்த நாள்
06 ஜூலை2021
20:16
புதுடில்லி:தொலைபேசியில் தொல்லை கொடுக்கும், ‘டெலிமார்க்கெட்டிங்’ நிறுவனங்களின் குரல்வளையை இன்னும் அதிகமாக நெருக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது, தொலைதொடர்பு துறை.
இந்த ‘டெலிமார்க்கெட்டர்’களின் ஒவ்வொரு அழைப்புக்கும், அவர்கள் அனுப்பும் ஒவ்வொரு குறுஞ்செய்திக்கும், 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் தற்போது இருக்கும் அபராதம் விதிப்பதற்கான அடுக்குகளை குறைக்கவும் திட்டமிட்டுள்ளது.இதன்படி, 10 தடவை வரையிலான விதிமீறல்களுக்கு 1,000 ரூபாய் அபராதமும், 1,0-50 மீறல்களுக்கு 5 ஆயிரம் ரூபாயும்; 50க்கும் மேற்பட்ட மீறல்களுக்கு, தலா 10 ஆயிரம் ரூபாயும் அபராதம் விதிப்பது பற்றி ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
தற்போது இந்த அடுக்கு, 0-1- – 100; 100 – -1,000; 1000க்கும் மேல் என உள்ளது. மேலும், தானியங்கி முறையில் இந்த அழைப்பாளர்களின் சாதனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்படும். அதில் சந்தேகம் எழும்பட்சத்தில், மறு சரிபார்ப்புக்கு உட்படுத்தப்படும். விதிமுறை மீறல்கள் தொடரும்பட்சத்தில், அவர்களுக்கு தொலைதொடர்பு இணைப்புகள் வழங்க இரண்டு ஆண்டு தடை விதிக்கப்படும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|