பதிவு செய்த நாள்
06 ஜூலை2021
20:26
புதுடில்லி:கொரோனா தொற்று நோய், ஓரளவு மட்டுப்படுத்தப்பட்டு வரும் நிலையில், பல வெளிநாட்டு நிறுவனங்கள், தங்களுடைய சந்தையை மற்ற நாடுகளிலும் விரிவுபடுத்தும் முயற்சியில் இறங்கி வருகின்றன.
இந்த வகையில், அமெரிக்காவைச் சேர்ந்த, மிகவும் பிரபலமான சிகரெட் லைட்டரான, ‘ஸிப்போ’ இந்தியாவிலும் வணிகத்தை விரிவுபடுத்த முடிவெடுத்துள்ளது.எத்தகைய சூறைக்காற்று மற்றும் சூழலிலும் எரியக் கூடிய ‘லைட்டர்’ என புகழ் பெற்றது, இந்த ஸிப்போ லைட்டர். கடந்த 80 ஆண்டுகளில், ஆயிரக்கணக்கான மாடல்களில் லைட்டர்களை தயாரித்துள்ளது,
இந்நிறுவனம். ராணுவத்தினருக்கான பிரத்யேக மாடலையும் தயாரித்து வழங்கி வருகிறது. இந்நிறுவனம், ‘ஸிப்போ லைட்டர்ஸ் இந்தியா’ எனும் பெயரில் கடந்த ஆண்டு துணை நிறுவனத்தை நம் நாட்டில் துவங்கியது. தற்போது, புதிய வினியோகஸ்தருடன் பணிகளை துவக்கி உள்ளது.‘ஆன்லைன்’ வாயிலாகவும், கடைகள் வாயிலாகவும் விற்பனையை மேற்கொள்ள இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
சீனா, இந்தோனேஷியா, பிரேசில் ஆகிய நாடுகளில் கால் பதித்தாலும், இந்திய சந்தை, தங்களுக்கு மிகவும் முக்கியமான ஒன்று என, இந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.இருப்பினும் இந்நிறுவனத்தின் முன், தற்போது இருக்கும் மிகப்பெரிய சவால் போலிகள் உலாவுவது தான். அதை தடுக்கும் முயற்சிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|