பதிவு செய்த நாள்
06 ஜூலை2021
20:28
புதுடில்லி:பொதுத்துறை நிறுவனமான, என்.எம்.டி.சி., பங்குகளில் நான்கு சதவீதத்தை, மத்திய அரசு, தொடர் பங்கு வெளியீட்டின் வாயிலாக, விற்பனை செய்கிறது. சில்லரை முதலீட்டாளர்களுக்கான பங்கு விற்பனை, இன்று துவங்குகிறது.
இந்நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை, 165 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட, 11.72 கோடி பங்குகள் விற்பனை செய்யப்பட உள்ளன. சில்லரை முதலீட்டாளர்கள் அல்லாதோருக்கான பங்கு விற்பனை துவங்கியது.பங்குச் சந்தைகளில், தனி சாளரம் வாயிலாக, இந்த பங்கு விற்பனை, காலை 9.15 மணி முதல், மாலை 3.30 வரை நடைபெறும் என, என்.எம்.டி.சி., தெரிவித்து உள்ளது.
என்.எம்.டி.சி., நிறுவனம், உருக்கு துறை அமைச்சகத்தின் கீழ், இரும்புத் தாது சுரங்க பணிகளில் ஈடுபட்டு வரும் ஒரு பொதுத்துறை நிறுவனமாகும்.மத்திய அரசின் வசம், இந்நிறுவனத்தின் 68.29 சதவீத பங்குகள் உள்ளன. பங்கு விலக்கல் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இந்நிறுவனத்தின் 4 சதவீத பங்குகள், தற்போது விற்பனை செய்யப்படுகிறது. இந்நிறுவன பங்கின் விலை, தேசிய பங்குச் சந்தையில், நேற்றைய வர்த்தகத்தின் முடிவில், 168.45 ரூபாயாக இருந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|