பதிவு செய்த நாள்
07 ஜூலை2021
21:36
மும்பை,: கொரோனா காலத்தில், உலகை இயங்க வைத்தது தகவல் தொழில்நுட்ப துறை என, விப்ரோ நிறுவனத்தின் நிறுவனர் அஜிம் பிரேம்ஜி தெரிவித்து உள்ளார்.
நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு அவர் கூறியதாவது:கொரோனா தொற்று நோய் பரவலை தடுக்க, உலகம் முழுக்க ஊரடங்குகளை நாம் கண்டோம். இந்நிலையில், தகவல் தொழில்நுட்ப துறை தான், உலகை இயங்க வைத்து வருகிறது. அதுமட்டுமின்றி இத்துறை, மாற்றங்களுக்கு ஏற்றதாகவும் இருக்கிறது.
நடப்பு நிதியாண்டில், தகவல் தொழில்நுட்ப துறை, இரட்டை இலக்க வளர்ச்சியை கண்டால், நான் ஆச்சரியப்பட மாட்டேன். கொரோனா தொற்றையும் மீறி, கடந்த நிதியாண்டில், இத்துறையானது, 2 – 3 சதவீதம் அளவுக்கு வளர்ச்சி கண்டது.மேலும், நிகர அடிப்படையில் 1.58 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளையும் வழங்கி இருக்கிறது.
கொரோனா தொற்று ஏற்பட்ட சில வாரங்களுக்குள்ளாகவே, இத்துறை, வீட்டிலிருந்து பணிபுரியும் முறைக்கு மாறியது.மேலும், 90 சதவீத ஊழியர்கள் வீட்டிலிருந்தபடியே திட்டங்களை முடித்து கொடுத்தனர்.பெண்கள் தங்களுடைய வேலையை விட்டுவிடாமல், வீட்டிலிருந்து தொடர்வதற்கு ஏற்றதாகவும் இது இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|