‘ஷாதிசாகா டாட் காம்’  ‘மேட்ரிமோனி’ வசமானது ‘ஷாதிசாகா டாட் காம்’ ‘மேட்ரிமோனி’ வசமானது ...  வளர்ச்சி 10 சதவீதம் ‘பிட்ச் ரேட்டிங்ஸ்’ கணிப்பு வளர்ச்சி 10 சதவீதம் ‘பிட்ச் ரேட்டிங்ஸ்’ கணிப்பு ...
‘பேடிஎம்’ நிர்வாக குழுவிலிருந்து சீன உறுப்பினர்கள் விலகல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஜூலை
2021
21:39

புதுடில்லி:‘டிஜிட்டல்’ பணப்பரிவர்த்தனை நிறுவனமான ‘பேடிஎம்’, நிறுவனத்தின் நிர்வாக குழுவிலிருந்து, சீனாவை சேர்ந்தவர்கள் விலகியுள்ளனர்.

சீன உறுப்பினர்களுக்கு பதிலாக, அமெரிக்கா மற்றும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள், நிர்வாக குழு உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர். இருப்பினும், பங்குதாரர்கள் விஷயத்தில் எந்த மாற்றமும் இல்லை.
சீனாவை சேர்ந்த அலிபே, அன்ட் பைனான்ஷியல், அலிபாபா உள்ளிட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள், நிர்வாக குழு இயக்குனர்களாக இருந்து வந்த நிலையில், இப்போது அவர்கள் யாரும் பொறுப்பில் இல்லை என, ஒழுங்குமுறை ஆணையங்களுக்கு தெரிவித்துள்ளது, பேடிஎம் நிறுவனம்.

இதையடுத்து, தற்போதைய நிர்வாக குழுவில், சீனர்கள் யாரும் இடம்பெறவில்லை.பேடிஎம் நிறுவனத்தின், 29.71 சதவீத பங்குகள், சீனாவை சேர்ந்த, அலிபாபா குழுமத்திற்கு சொந்தமான, அன்ட் குழுமத்தின் வசம் உள்ளன. இது தவிர, ஜப்பானை சேர்ந்த சாப்ட்பேங்க் விஷன் பண்டு, எஸ்.ஏ.எப்., பார்ட்னர்ஸ், ஏ.ஜி.எச். ஹோல்டிங், டிஸ்கவரி கேப்பிட்டல், பெர்க்ஷயர் கேப்பிட்டல் ஆகிய நிறுவனங்களின் வசமும் குறிப்பிடத்தக்க அளவிலான பங்குகள் உள்ளன.

பேடிஎம் நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதை அடுத்து, இத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இந்நிறுவனம் பங்கு வெளியீட்டின் வாயிலாக, 16,600 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது. 12ம் தேதி நடைபெற இருக்கும் பொதுக்குழு கூட்டத்தில், பங்குதாரர்களிடம் இதற்கான அனுமதி கோரப்படும் என தெரிகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)