பதிவு செய்த நாள்
07 ஜூலை2021
21:39
புதுடில்லி:‘டிஜிட்டல்’ பணப்பரிவர்த்தனை நிறுவனமான ‘பேடிஎம்’, நிறுவனத்தின் நிர்வாக குழுவிலிருந்து, சீனாவை சேர்ந்தவர்கள் விலகியுள்ளனர்.
சீன உறுப்பினர்களுக்கு பதிலாக, அமெரிக்கா மற்றும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள், நிர்வாக குழு உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர். இருப்பினும், பங்குதாரர்கள் விஷயத்தில் எந்த மாற்றமும் இல்லை.
சீனாவை சேர்ந்த அலிபே, அன்ட் பைனான்ஷியல், அலிபாபா உள்ளிட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள், நிர்வாக குழு இயக்குனர்களாக இருந்து வந்த நிலையில், இப்போது அவர்கள் யாரும் பொறுப்பில் இல்லை என, ஒழுங்குமுறை ஆணையங்களுக்கு தெரிவித்துள்ளது, பேடிஎம் நிறுவனம்.
இதையடுத்து, தற்போதைய நிர்வாக குழுவில், சீனர்கள் யாரும் இடம்பெறவில்லை.பேடிஎம் நிறுவனத்தின், 29.71 சதவீத பங்குகள், சீனாவை சேர்ந்த, அலிபாபா குழுமத்திற்கு சொந்தமான, அன்ட் குழுமத்தின் வசம் உள்ளன. இது தவிர, ஜப்பானை சேர்ந்த சாப்ட்பேங்க் விஷன் பண்டு, எஸ்.ஏ.எப்., பார்ட்னர்ஸ், ஏ.ஜி.எச். ஹோல்டிங், டிஸ்கவரி கேப்பிட்டல், பெர்க்ஷயர் கேப்பிட்டல் ஆகிய நிறுவனங்களின் வசமும் குறிப்பிடத்தக்க அளவிலான பங்குகள் உள்ளன.
பேடிஎம் நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதை அடுத்து, இத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இந்நிறுவனம் பங்கு வெளியீட்டின் வாயிலாக, 16,600 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது. 12ம் தேதி நடைபெற இருக்கும் பொதுக்குழு கூட்டத்தில், பங்குதாரர்களிடம் இதற்கான அனுமதி கோரப்படும் என தெரிகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|