பதிவு செய்த நாள்
07 ஜூலை2021
21:44
மும்பை,:மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண், ‘சென்செக்ஸ்’ நேற்றைய வர்த்தகத்தில், புதிய உச்சத்தை தொட்டது. அதன் வரலாற்றில் முதல் முறையாக, 53 ஆயிரம் புள்ளிகளை தாண்டி சாதனை படைத்துள்ளது.
இதை போலவே, தேசிய பங்குச் சந்தை குறியிட்டு எண் ‘நிப்டி’யும் சாதனை உயரத்தை நேற்று தொட்டுள்ளது. நேற்றைய வர்த்தகத்தின் முடிவில், சென்செக்ஸ் 53 ஆயிரத்து 54 புள்ளிகளில் நிலைபெற்றது. 194 புள்ளிகள் அதிகரித்து, இந்த சாதனை உயரத்தை தொட்டுள்ளது.‘நிப்டி’யும் உயர்ந்து, வர்த்தகத்தின் முடிவில் 15 ஆயிரத்து 879 புள்ளிகளில் நிலை பெற்றது.
நேற்றைய வர்த்தகத்தில், டாடா ஸ்டீல் நிறுவன பங்கு அதிக விலை உயர்வை கண்டது. கிட்டத்தட்ட 4 சதவீத உயர்வை கண்டது.இதையடுத்து, பஜாஜ் பின்சர்வ், இண்டஸ்இண்ட் பேங்க், எச்.டி.எப்.சி., நெஸ்லே இந்தியா ஆகிய நிறுவன பங்குகளும் விலை உயர்ந்தன. மாறாக டைட்டன், மாருதி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டெக் மகிந்திரா நிறுவன பங்குகள், விலை சரிவை சந்தித்தன. மத்திய அமைச்சரவை மாற்றம் குறித்த விஷயங்களும், சந்தை பங்கேற்பாளர்களிடம் ஆர்வத்தை துாண்டின.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|