பதிவு செய்த நாள்
10 ஜூலை2021
20:16
புதுடில்லி: மத்திய அரசு, நாளை வெளியிடும் தங்க சேமிப்பு பத்திரத்திற்கு, 1 கிராம் 4,807 ரூபாய் என விலை நிர்ணயம் செய்துள்ளது. நடப்பு நிதியாண்டுக்கான தங்க சேமிப்பு பத்திரத்தின் நான்காம் கட்ட வெளியீடு, நாளை துவங்கி 16ம் தேதி வரை ஐந்து நாட்கள் நடைபெற உள்ளது.
தள்ளுபடி விலையில்
வலைதளம் அல்லது மின்னணு முறையில் மேற்கொள்ளும் முதலீடுகளுக்கு, 1 கிராமுக்கு 50 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படும்.இதனால், ‘கிரெடிட், டெபிட் கார்டு’ உள்ளிட்ட மின்னணு பணப் பரிவர்த்தனையில், தங்க சேமிப்பு பத்திரங்களை வாங்குவோருக்கு, 1 கிராம் 4,757 ரூபாய்க்கு கிடைக்கும்.வங்கிகள், ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன், மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகள், தலைமை அஞ்சலகங்கள் ஆகியவற்றில் தங்க சேமிப்பு பத்திரங்கள் விற்பனை செய்யப்படும்.
ஆவண வடிவில்
மத்திய அரசு, தங்க இறக்குமதியை குறைக்கும் நடவடிக்கையில் ஒன்றாக, 2015 நவம்பரில், தங்க சேமிப்பு பத்திர திட்டத்தை அறிவித்தது. இதில் தங்கத்தை, ஆவண வடிவில் சேமிக்கலாம். ஒரு கிராம் தங்கம், 1 யூனிட் என்ற கணக்கில் வழங்கப்படும். மே மாதத்திலிருந்து செப்டம்பர் வரையிலான காலத்தில், இந்த தங்க பத்திர வெளியீடு ஆறு கட்டமாக நடைபெற உள்ளது.
அரசின் சார்பாக இந்த பத்திர வெளியீட்டை, ரிசர்வ் வங்கி மேற்கொள்கிறது.எவ்வளவு வாங்கலாம்துவக்கத்திலிருந்து கடந்த மார்ச் மாதம் வரையிலான காலத்தில், இந்த பத்திர வெளியீட்டின் வாயிலாக இதுவரை, மொத்தம் 25 ஆயிரத்து 702 கோடி ரூபாய் திரட்டப்பட்டுள்ளது.இப்பத்திரங்களில், தனிநபர்கள் குறைந்தபட்சம் ஒரு கிராமிலிருந்து 4 கிலோ வரை முதலீடு செய்யலாம். அறக்கட்டளைகள் உள்ளிட்டவை 20 கிலோ வரை முதலீடு செய்யலாம்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|