எரிபொருள் தேவை ஜூனில் அதிகரிப்புஎரிபொருள் தேவை ஜூனில் அதிகரிப்பு ...  விற்பனைக்கு தயாராகும் ஐ.டி.பி.ஐ., வங்கி பங்குகள் விற்பனைக்கு தயாராகும் ஐ.டி.பி.ஐ., வங்கி பங்குகள் ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
நாளை தங்க பத்திர வெளியீடு 1 கிராம் 4,807 ரூபாய்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஜூலை
2021
20:16

புதுடில்லி: மத்திய அரசு, நாளை வெளியிடும் தங்க சேமிப்பு பத்திரத்திற்கு, 1 கிராம் 4,807 ரூபாய் என விலை நிர்ணயம் செய்துள்ளது. நடப்பு நிதியாண்டுக்கான தங்க சேமிப்பு பத்திரத்தின் நான்காம் கட்ட வெளியீடு, நாளை துவங்கி 16ம் தேதி வரை ஐந்து நாட்கள் நடைபெற உள்ளது.

தள்ளுபடி விலையில்

வலைதளம் அல்லது மின்னணு முறையில் மேற்கொள்ளும் முதலீடுகளுக்கு, 1 கிராமுக்கு 50 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படும்.இதனால், ‘கிரெடிட், டெபிட் கார்டு’ உள்ளிட்ட மின்னணு பணப் பரிவர்த்தனையில், தங்க சேமிப்பு பத்திரங்களை வாங்குவோருக்கு, 1 கிராம் 4,757 ரூபாய்க்கு கிடைக்கும்.வங்கிகள், ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன், மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகள், தலைமை அஞ்சலகங்கள் ஆகியவற்றில் தங்க சேமிப்பு பத்திரங்கள் விற்பனை செய்யப்படும்.

ஆவண வடிவில்

மத்திய அரசு, தங்க இறக்குமதியை குறைக்கும் நடவடிக்கையில் ஒன்றாக, 2015 நவம்பரில், தங்க சேமிப்பு பத்திர திட்டத்தை அறிவித்தது. இதில் தங்கத்தை, ஆவண வடிவில் சேமிக்கலாம். ஒரு கிராம் தங்கம், 1 யூனிட் என்ற கணக்கில் வழங்கப்படும். மே மாதத்திலிருந்து செப்டம்பர் வரையிலான காலத்தில், இந்த தங்க பத்திர வெளியீடு ஆறு கட்டமாக நடைபெற உள்ளது.

அரசின் சார்பாக இந்த பத்திர வெளியீட்டை, ரிசர்வ் வங்கி மேற்கொள்கிறது.எவ்வளவு வாங்கலாம்துவக்கத்திலிருந்து கடந்த மார்ச் மாதம் வரையிலான காலத்தில், இந்த பத்திர வெளியீட்டின் வாயிலாக இதுவரை, மொத்தம் 25 ஆயிரத்து 702 கோடி ரூபாய் திரட்டப்பட்டுள்ளது.இப்பத்திரங்களில், தனிநபர்கள் குறைந்தபட்சம் ஒரு கிராமிலிருந்து 4 கிலோ வரை முதலீடு செய்யலாம். அறக்கட்டளைகள் உள்ளிட்டவை 20 கிலோ வரை முதலீடு செய்யலாம்.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)