பதிவு செய்த நாள்
14 ஜூலை2021
20:24
சென்னை:தமிழகத்தில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை மீட்டெடுப்பதற்கான திட்டங்களை வகுக்க, வல்லுனர்கள் குழு, அமைக்கப்படும் என, சட்டசபையில் கவர்னர் அறிவித்தார். இதன்படி, இந்த குழு விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.
இதுகுறித்து, தொழில்துறை அதிகாரிகள் கூறியதாவது:கொரோனா காரணமாக, பல்வேறு நிறுவனங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிறுவனங்களை மீட்டெடுக்கும் வகையில், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை அதிகாரிகள், செயலர், பட்டய கணக்காளர்கள், வங்கியாளர்கள், நிதித்துறை வல்லுனர்கள், நிறுவனங்களைச் சேர்ந்த, சங்க உறுப்பினர் உட்பட, எட்டு பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
குழுவிற்கான தலைவர் இன்னும் நியமிக்கப்படவில்லை. அவர் நியமிக்கப்பட்டதும், குழு உறுப்பினர்கள் தொடர்பான விபரங்கள், விரைவில் அறிவிக்கப்பட்டு, செயல்படத் துவங்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|