பதிவு செய்த நாள்
14 ஜூலை2021
20:45
புதுடில்லி:இந்தியாவின் மிகப் பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான, டி.சி.எஸ்., எனும், ‘டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்’ நிறுவனம், பிரிட்டனில் மட்டும், கடந்த ஐந்து ஆண்டுகளில், 7 ஆயிரம் பேரை பணியில் அமர்த்தி இருப்பதாகவும்; இவர்களில் 1,800 பேர், பயிற்சிபெறுபவர்கள் என்றும் தெரிவித்துள்ளது.
இதையடுத்து, பிரிட்டனில், இந்நிறுவனத்தில் பணிபுரிவோர் எண்ணிக்கை, 18 ஆயிரமாக உயர்ந்துள்ளது.பிரிட்டனில் உள்ள 30 இடங்களில், இந்த 18 ஆயிரம் பேர் பணிபுரிகிறார்கள். மேலும், இந்நிறுவனம் நடப்பு ஆண்டில், கூடுதலாக 1,500 பேரை அங்கு பணியில் அமர்த்த திட்டமிட்டுள்ளது.பிரிட்டனிலுள்ள தகவல் தொழில்நுட்ப துறையில், சராசரியாக 17 சதவீத பெண்கள் பணிபுரிகிறார்கள்.
ஆனால், டி.சி.எஸ்., நிறுவனத்தில் பணிபுரிவோரில் 28 சதவீதம் பேர் பெண்கள் என, இந் நிறுவனம் தெரிவித்துள்ளது.மேலும், இந்நிறுவனம், பிரிட்டனில் உள்ள ஊழியர்களில் 90 சதவீதம் பேரை, கடந்த இரண்டு ஆண்டுகளில் திறன்மிக்கவர்களாக மேம்படுத்தி உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும் ஐ.டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|