பதிவு செய்த நாள்
14 ஜூலை2021
20:51
புதுடில்லி:மாருதி சுசூகி நிறுவனம், 18 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில், ஹரியானாவில், புதிய ஆலையை நிறுவ திட்டமிட்டுள்ளது. நிறுவனத்தின் தற்போதைய குருகிராம் ஆலைக்கு மாற்றாக இது இருக்கும் என்றும்; இந்த ஆலையின் தயாரிப்பு திறன், ஆண்டுக்கு, 7.5 _10 லட்சம் வாகனங்களாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
இது குறித்து, மாருதி சுசூகி நிறுவனத்தின் தலைவர் ஆர்.சி.பார்கவா கூறும்போது, “குருகிராம் ஆலையை அருகில் உள்ள வேறு இடத்துக்கு மாற்ற நிறுவனம் முன்பிருந்தே திட்டமிட்டு வந்துள்ளது” என தெரிவித்துள்ளார்.இருப்பினும், புதிய ஆலை, ஹரியானாவில் எங்கே அமைய உள்ளது என்பது குறித்து, அவர் எதுவும் தெரிவிக்கவில்லை.
ஹரியானாவில் எந்த ஒரு ஆலை அல்லது வணிகத்தை ஏற்படுத்தும்பட்சத்தில், 75 சதவீத வேலைவாய்ப்பு அப்பகுதியினருக்கு வழங்க வேண்டும் என அம்மாநில அரசு கொள்கை முடிவை கொண்டுள்ளது.
இது குறித்து குறிப்பிட்ட பார்கவா,“அந்த பிரச்னைகள் இன்னும் இருக்கின்றன. அவை தீர்க்கப்படவில்லை. அதனால், அங்கே புதிதாக எதுவும் மாறிவிடவில்லை” என தெரிவித்து உள்ளார்.குருகிராம் ஆலை, நிறுவனத்தின் முதல் ஆலையாகும். ஆனால், இப்போது ஆலை சுற்றிலும் குடியிருப்புகள் பெருகிவிட்டதால், மிகுந்த போக்கு வரத்து நெருக்கடியை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.இதனால் ஆலையை இடம் மாற்றும் முடிவுக்கு நிறுவனம் வந்துள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|