பதஞ்சலி குழுமத்தின் விற்றுமுதல் 30 ஆயிரம் கோடி ரூபாய் பதஞ்சலி குழுமத்தின் விற்றுமுதல் 30 ஆயிரம் கோடி ரூபாய் ...  ‘ஜஸ்ட் டயல்’ நிறுவனத்தை வளைக்க ‘ரிலையன்ஸ்’ தீவிரம் ‘ஜஸ்ட் டயல்’ நிறுவனத்தை வளைக்க ‘ரிலையன்ஸ்’ தீவிரம் ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
மாருதியின் முதல் தொழிற்சாலை வேறு இடத்துக்கு மாறுகிறது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஜூலை
2021
20:51

புதுடில்லி:மாருதி சுசூகி நிறுவனம், 18 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில், ஹரியானாவில், புதிய ஆலையை நிறுவ திட்டமிட்டுள்ளது. நிறுவனத்தின் தற்போதைய குருகிராம் ஆலைக்கு மாற்றாக இது இருக்கும் என்றும்; இந்த ஆலையின் தயாரிப்பு திறன், ஆண்டுக்கு, 7.5 _10 லட்சம் வாகனங்களாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இது குறித்து, மாருதி சுசூகி நிறுவனத்தின் தலைவர் ஆர்.சி.பார்கவா கூறும்போது, “குருகிராம் ஆலையை அருகில் உள்ள வேறு இடத்துக்கு மாற்ற நிறுவனம் முன்பிருந்தே திட்டமிட்டு வந்துள்ளது” என தெரிவித்துள்ளார்.இருப்பினும், புதிய ஆலை, ஹரியானாவில் எங்கே அமைய உள்ளது என்பது குறித்து, அவர் எதுவும் தெரிவிக்கவில்லை.

ஹரியானாவில் எந்த ஒரு ஆலை அல்லது வணிகத்தை ஏற்படுத்தும்பட்சத்தில், 75 சதவீத வேலைவாய்ப்பு அப்பகுதியினருக்கு வழங்க வேண்டும் என அம்மாநில அரசு கொள்கை முடிவை கொண்டுள்ளது.

இது குறித்து குறிப்பிட்ட பார்கவா,“அந்த பிரச்னைகள் இன்னும் இருக்கின்றன. அவை தீர்க்கப்படவில்லை. அதனால், அங்கே புதிதாக எதுவும் மாறிவிடவில்லை” என தெரிவித்து உள்ளார்.குருகிராம் ஆலை, நிறுவனத்தின் முதல் ஆலையாகும். ஆனால், இப்போது ஆலை சுற்றிலும் குடியிருப்புகள் பெருகிவிட்டதால், மிகுந்த போக்கு வரத்து நெருக்கடியை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.இதனால் ஆலையை இடம் மாற்றும் முடிவுக்கு நிறுவனம் வந்துள்ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)