பதிவு செய்த நாள்
15 ஜூலை2021
19:15
புதுடில்லி:முகேஷ் அம்பானியின் தலைமையிலான, ‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ நிறுவனம், ‘ஜஸ்ட்டயல்’ நிறுவனத்தை கையகப்படுத்தும் முயற்சியில் இறங்கி உள்ளது.
இது குறித்து, நன்கு அறிந்தவர்கள் தரப்பில் கூறியதாவது:ஜஸ்ட் டயல் நிறுவனம், உள்ளூர் தகவல் தேடல் சேவைகளில் முன்னணியில் இருக்கும் நிறுவனமாகும். இந்நிறுவனத்தை கையகப்படுத்துவதன் வாயிலாக, தன்னுடைய சில்லரை விற்பனை வணிகத்தை மேலும் பலமுள்ளதாக செய்யலாம் என, ரிலையன்ஸ் கருதுகிறது.இதையடுத்து, ஜஸ்ட்டயல் நிறுவனத்தின் நிறுவனர்களிடமிருந்து பெரும்பான்மை பங்கை கையகப்படுத்த, ரிலையன்ஸ் பேச்சு நடத்தி வருகிறது.
இவ்வகையில், ரிலையன்ஸ் 6,000 – 6,750 கோடி ரூபாய் வரை முதலீடு செய்ய தயாராக இருக்கிறது.இந்த பரிவர்த்தனை வெற்றிகரமாக முடிந்தால், வணிகங்கள் குறித்த, 25 ஆண்டுகால தகவல் தேடல் தரவுகள், ரிலையன்ஸ் வசம் வரும். மேலும், ஜஸ்ட்டயல் சேவை, நாடு முழுக்க பரவி இருப்பதால், அது, ரிலையன்ஸ் நிறுவனத்தின் வர்த்தகம் மற்றும் பேமென்ட் ஆகியவற்றுக்கு வலு சேர்க்கும்.நிதி திரட்டுவது சம்பந்தமாக, ஜஸ்ட்டயல் நிறுவனத்தின் நிர்வாக குழு இன்று கூட உள்ளது. இதில் ரிலையன்ஸ் முதலீடு குறித்து பேசப்படக்கூடும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
‘பியூச்சர்’ குழும வணிகங்களை கையகப்படுத்துவது நிறைவேறாமல், வழக்குகளில் சிக்கிக் கொண்டிருக்கிறது. இருப்பினும், பிற முயற்சிகளை தொடர்கிறது, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|