பதிவு செய்த நாள்
15 ஜூலை2021
19:45
புதுடில்லி:அமெரிக்காவை சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான,‘போர்டு’, இந்தியாவில், கார் தயாரிப்பை ஒப்பந்த அடிப்படையில் வேறு நிறுவனத்திடம் கொடுத்துவிடுவது, அல்லது, தொழிற்சாலைகளை விற்றுவிடுவது என்ற முடிவுக்கு வந்திருப்பதாக, சந்தை வட்டாரங்களில் கூறப்படுகிறது.
இது குறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:போர்டு நிறுவனம், தமிழகத்திலுள்ள மறைமலைநகர் மற்றும் குஜராத்தில் உள்ள சானந்த் ஆகிய இடங்களில் உள்ள ஆலைகளை, வேறு நிறுவனங்களுக்கு கொடுத்துவிடும் முடிவுக்கு வந்துள்ளது.எனவே, இது குறித்து அண்மைக் காலமாக பேச்சு நடைபெற்று வருகிறது.
பல கார் தயாரிப்பு நிறுவனங்களிடமும், போர்டு பேச்சு நடத்தி வந்தது. மகிந்திரா, எம்.ஜி., சாங்கன், கிரேட்வால் போன்ற பல நிறுவனங்களுடன் பேச்சு நடத்தி உள்ளது. சமீபமாக, ‘ஓலா’ நிறுவனத்துடன் பேச்சு நடத்தி உள்ளது. ஓலா நிறுவனம், தன்னுடைய மின்சார கார்கள் உற்பத்திக்கு, இந்த ஆலைகளை பயன்படுத்திக் கொள்ள திட்டமிடுகிறது. இருப்பினும், இது குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் இரு நிறுவனங்களும் வெளியிடவில்லை.
போர்டு நிறுவனத்தின் மறைமலை ஆலை, இரண்டு லட்சம் கார்களும்; 3.5 லட்சம் கார் என்ஜின்களும் தயாரிக்கும் வசதி படைத்தது. சானந்த் ஆலையில், 2.4 லட்சம் கார்களும்; 2.7 லட்சம் என்ஜின்களும் தயாரிக்க முடியும்.போர்டு நிறுவனம், இந்தியாவில், கடந்த ஜூன் மாதத்தில், 2,800 கார்களை விற்பனை செய்துள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|