‘ஜஸ்ட் டயல்’ நிறுவனத்தை வளைக்க ‘ரிலையன்ஸ்’ தீவிரம் ‘ஜஸ்ட் டயல்’ நிறுவனத்தை வளைக்க ‘ரிலையன்ஸ்’ தீவிரம் ...  நாட்டின் ஏற்றுமதி தொடர்ந்து ஏழாவது மாதமாக அதிகரிப்பு நாட்டின் ஏற்றுமதி தொடர்ந்து ஏழாவது மாதமாக அதிகரிப்பு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
‘ஓலா’வுக்கு கைமாறும் ‘போர்டு’ தொழிற்சாலைகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஜூலை
2021
19:45

புதுடில்லி:அமெரிக்காவை சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான,‘போர்டு’, இந்தியாவில், கார் தயாரிப்பை ஒப்பந்த அடிப்படையில் வேறு நிறுவனத்திடம் கொடுத்துவிடுவது, அல்லது, தொழிற்சாலைகளை விற்றுவிடுவது என்ற முடிவுக்கு வந்திருப்பதாக, சந்தை வட்டாரங்களில் கூறப்படுகிறது.

இது குறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:போர்டு நிறுவனம், தமிழகத்திலுள்ள மறைமலைநகர் மற்றும் குஜராத்தில் உள்ள சானந்த் ஆகிய இடங்களில் உள்ள ஆலைகளை, வேறு நிறுவனங்களுக்கு கொடுத்துவிடும் முடிவுக்கு வந்துள்ளது.எனவே, இது குறித்து அண்மைக் காலமாக பேச்சு நடைபெற்று வருகிறது.
பல கார் தயாரிப்பு நிறுவனங்களிடமும், போர்டு பேச்சு நடத்தி வந்தது. மகிந்திரா, எம்.ஜி., சாங்கன், கிரேட்வால் போன்ற பல நிறுவனங்களுடன் பேச்சு நடத்தி உள்ளது. சமீபமாக, ‘ஓலா’ நிறுவனத்துடன் பேச்சு நடத்தி உள்ளது. ஓலா நிறுவனம், தன்னுடைய மின்சார கார்கள் உற்பத்திக்கு, இந்த ஆலைகளை பயன்படுத்திக் கொள்ள திட்டமிடுகிறது. இருப்பினும், இது குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் இரு நிறுவனங்களும் வெளியிடவில்லை.

போர்டு நிறுவனத்தின் மறைமலை ஆலை, இரண்டு லட்சம் கார்களும்; 3.5 லட்சம் கார் என்ஜின்களும் தயாரிக்கும் வசதி படைத்தது. சானந்த் ஆலையில், 2.4 லட்சம் கார்களும்; 2.7 லட்சம் என்ஜின்களும் தயாரிக்க முடியும்.போர்டு நிறுவனம், இந்தியாவில், கடந்த ஜூன் மாதத்தில், 2,800 கார்களை விற்பனை செய்துள்ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)