‘ஜஸ்ட் டயல்’ நிறுவனத்தை வளைக்க ‘ரிலையன்ஸ்’ தீவிரம் ‘ஜஸ்ட் டயல்’ நிறுவனத்தை வளைக்க ‘ரிலையன்ஸ்’ தீவிரம் ...  நாட்டின் ஏற்றுமதி தொடர்ந்து ஏழாவது மாதமாக அதிகரிப்பு நாட்டின் ஏற்றுமதி தொடர்ந்து ஏழாவது மாதமாக அதிகரிப்பு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
‘மாஸ்டர்கார்டு’க்கு ரிசர்வ் வங்கி தடை வேகமாக 'விசா'வுக்கு மாறும் வங்கிகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஜூலை
2021
19:52

புதுடில்லி:‘மாஸ்டர்கார்டு’ நிறுவனத்துக்கு, ரிசர்வ் வங்கி விதித்த தடை காரணமாக, பல வங்கிகள் மாற்று ஏற்பாடுகளில் இறங்கி வருகின்றன.பரிவர்த்தனை குறித்த தரவுகளை, இந்தியாவில் சேமிப்பது குறித்த விதிமுறையை, மாஸ்டர்கார்டு நிறுவனம் பின்பற்றாத காரணத்தால், 22ம் தேதி முதல், புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க, ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது.

இந்தியாவில் கிரெடிட், டெபிட் கார்டுகளை வழங்கி வரும் பல வங்கிகள், மாஸ்டர்கார்டு உடன் இணைந்து சேவைகளை வழங்கி வருகின்றன.இந்நிலையில், மாஸ்டர்கார்டுக்கு ரிசர்வ் வங்கி, ‘ரெட்கார்டு’ காட்டிவிட்டதை அடுத்து, இதே போன்ற மற்றொரு நிறுவனமான, ‘விசா’ நிறுவனத்துடன் இணையும் முயற்சியில் சில வங்கிகள் இறங்கி உள்ளன.

மாஸ்டர்கார்டுக்கு விதிக்கப்பட்ட தடையால், புதிய கார்டுகள் வழங்குவது பாதிக்கப்படும் என, ஆர்.பி.எல்., பேங்க் தெரிவித்துள்ளது. மேலும் தடைவிதிப்பை அடுத்து, இவ்வங்கி, வாடிக்கையாளர்களுக்கு புதிய கார்டுகளை வழங்க,‘விசா வொர்ல்டுவைடு’ நிறுவனத்துடன் கூட்டு வைத்துள்ளதாக தெரிவித்து உள்ளது.

ஆர்.பி.எல்., பேங்க், இதுநாள்வரை, மாஸ்டர்கார்டு உடன் மட்டுமே இணைந்து, கிரெடிட் கார்டுகளை வழங்கி வந்தது.ஆர்.பி.எல்., பேங்க் மட்டுமின்றி; பஜாஜ் பின்சர்வ், யெஸ் பேங்க் ஆகியவையும் இந்த தடையால் பெரிய பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றன.எச்.டி.எப்.சி., பேங்கின் கார்டு திட்டங்களில், 60 சதவீதம், மாஸ்டர்கார்டு, ஏமெக்ஸ், டைனர்ஸ் ஆகயவற்றுடன் இணைந்து வழங்கப்பட்டு வருகிறது.

ஐ.சி.ஐ.சி.ஐ., ஆக்சிஸ் ஆகிய வங்கிகளில் இது, 35 – 36 சதவீதம் இருக்கும், கோட்டக் மகிந்திரா பேங்க், முழுக்க முழுக்க விசா நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவதால், அதற்கு பெரிய பாதிப்புகள் எதுவும் இருக்காது என, ஜப்பானை சேர்ந்த ‘நொமுரா’ நிறுவன ஆய்வறிக்கை தெரிவித்து உள்ளது.பல வங்கிகள், மாஸ்டர்கார்டுக்கு பதிலாக, விசா உடன் ஒப்பந்தம் செய்துகொண்டாலும், தொழில்நுட்ப ஒருங்கிணைப்புக்கு, 8 முதல் 10 வாரங்கள் வரை பிடிக்கும் என கூறப்படுகிறது.

ரிசர்வ் வங்கி விதித்துள்ள தடை குறித்து, ‘மாஸ்டர் கார்டு ஆசியா பசிபிக்’ நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:கடந்த 2018ம் ஆண்டில், உள்நாட்டு பரிவர்த்தனை குறித்த தரவுகளை இந்தியாவில் சேமிக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்ததிலிருந்து, இந்த நிபந்தனைகளுக்கு இணங்குவது குறித்த அறிக்கைகளை, நாங்கள் வழங்கி வந்துள்ளோம்.

இதுகுறித்த பிரச்னைகளை தீர்ப்பதற்கு, கூடுதல் விபரங்கள் தேவைப்படும்பட்சத்தில், அவற்றை வழங்கி ஒத்துழைக்கத் தயாராக இருக்கிறோம். அரசின், ‘டிஜிட்டல் இந்தியா’ திட்டத்தை முன்னெடுக்க, வாடிக்கையாளர்கள் மற்றும் கூட்டாளிகளுடன் இணைந்து பணியாற்ற, நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.இவ்வாறு தெரிவித்து உள்ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)