பதிவு செய்த நாள்
16 ஜூலை2021
19:47
புதுடில்லி:நாட்டின் ஏற்றுமதி தொடர்ந்து ஏழாவது மாதமாக ஜூன் மாதத்திலும் அதிகரித்துள்ளது. இம் மாதத்தில் ஏற்றுமதி 48.34 சதவீதம் அதிகரித்து 2.44 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என வர்த்தக துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பெட்ரோலிய பொருட்கள் நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ரசாயனம் ஆகியவை அதிக அளவில் ஏற்றுமதி ஆகியுள்ளன.கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் ஏற்றுமதி 1.65 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.மதிப்பீட்டு மாதத்தில் ஏற்றுமதி மட்டுமின்றி; இறக்குமதியும் அதிகரித்துள்ளது. இறக்குமதி 98.31 சதவீதம் அதிகரித்து 3.14 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
இம்மாதத்தில் தங்கத்தின் இறக்குமதி 60 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. இறக்குமதியும் அதிகரித்ததை அடுத்து நாட்டின் வர்த்தக பற்றாக்குறை 70 ஆயிரத்து 275 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதே ஜூன் மாதத்தில் வர்த்தக உபரி 5,925 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.கடந்த ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான காலத்தில் ஏற்றுமதி 85.88 சதவீதம் அதிகரித்துள்ளது. இவ்வாறு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|