நாட்டின் ஏற்றுமதி தொடர்ந்து ஏழாவது மாதமாக அதிகரிப்பு நாட்டின் ஏற்றுமதி தொடர்ந்து ஏழாவது மாதமாக அதிகரிப்பு ... மாருதி சுசூகி ஸ்மார்ட் பைனான்ஸ் மூலம் இனி ஆன்லைனில் கார் கடன் வாங்கலாம்! மாருதி சுசூகி ஸ்மார்ட் பைனான்ஸ் மூலம் இனி ஆன்லைனில் கார் கடன் வாங்கலாம்! ...
தலைமை பொருளாதார ஆலோசகர் வளர்ச்சி குறித்த கணிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜூலை
2021
19:49

புதுடில்லி:நாட்டின் பொருளாதாரம் 2023ம் நிதியாண்டில் இருந்து 6.5 முதல் 7 சதவீதம் வரை வளர்ச்சியைக் காணத் துவங்கும் என தலைமை பொருளாதார ஆலோசகர் கே.சுப்ரமணியன் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது:இதுவரை அரசாங்கம் மேற்கொண்ட பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் தடுப்பூசி போடுவதை விரைவுபடுத்துவது போன்றவற்றால் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி காணத் துவங்கி இருக்கிறது. கடந்த நிதியாண்டின் இறுதி காலாண்டில் மீட்சி காணத் துவங்கிய போதும் ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது இரண்டாவது அலையின் காரணமாக அந்த நிதியாண்டின் இரண்டாவது பாதி பாதிப்புக்கு உள்ளானது.

இரண்டாவது அலை உடல்நலத்தில் மிகுந்த பாதிப்புகளை ஏற்படுத்திய போதும் அதன் பொருளாதார பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டதாகவே இருந்தது.இதற்கு இரண்டாவது அலையின் காலம் முதல் அலையை விட குறைவாக இருந்ததும்; ஊரடங்குகள் மாநில அளவில் மேற்கொள்ளப்பட்டதும் முக்கியமான காரணங்களாகும்.இரண்டாவது அலையின் பாதிப்பு பெரிதாக இருக்காது என நாங்கள் கருதுகிறோம்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மீட்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கச் சலுகைகள் குறு சிறு நடுத்தர நிறுவனங்களின் வரம்பு மாற்றியமைக்கப்பட்டது வாராக்கடன் வங்கி அமைப்பது என பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)