பதிவு செய்த நாள்
16 ஜூலை2021
19:53
புதுடில்லி:கடந்த ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலத்தில் நாட்டில் வீடுகள் விற்பனை எட்டு நகரங்களில் 67 சதவீதம் அளவுக்கு அதிகரித்திருப்பதாக சொத்து ஆலோசனை நிறுவனமான ‘நைட் பிராங்க் இந்தியா’ தெரிவித்துள்ளது.
இது குறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது:தேவைகள் அதிகரித்ததை தொடர்ந்து வீடுகள் விற்பனையும் அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்புகளையும் மீறி மும்பை மற்றும் புனே ஆகிய நகரங்களில் விற்பனை அதிகரித்து உள்ளது.கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு இத்துறை நன்றாக செயல்படும் என எதிர்பார்க்கிறோம். நிலையான விலை குறைவான வீட்டுக் கடன் வட்டி ஆகியவை காரணமாக நடப்பு ஆண்டின் இரண்டாவது பாதியிலும் விற்பனை நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
அதுமட்டுமின்றி தொடர்ந்து மீட்சி கண்டு வரும் பொருளாதாரம் அதிகரித்து வரும் தடுப்பூசி போடுதல் ஆகியவையும் வீடுகள் விற்பனைக்கு வழிவகுக்கும்.நகரங்களை பொறுத்தவரை பதிவுக் கட்டணம் குறைக்கப்பட்டதை அடுத்து மும்பை புனே ஆகிய இடங்களில் அதிக எண்ணிக்கையிலான வீடுகள் விற்பனை ஆகியுள்ளன.மும்பையில் 53 சதவீதமும் புனேவில் 74 சதவீதமும் வீடுகள் விற்பனை அதிகரித்துள்ளது.சென்னையில் 93 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது.
மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|