பதிவு செய்த நாள்
17 ஜூலை2021
19:22
புதுடில்லி:‘ரிலையன்ஸ் ரீட்டெய்ல் வெஞ்சர்ஸ்’ நிறுவனம், ‘ஜஸ்ட் டயல்’ நிறுவனத்தின், 40.95 சதவீத பங்குகளை, 3,497 கோடி ரூபாய்க்கு கையகப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாகவே, சந்தையில் இது குறித்த பேச்சுகள் அடிபட்டு கொண்டிருந்த நிலையில், தற்போது ரிலையன்ஸ் இந்த அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. மேலும், 2.17 கோடி ஜஸ்ட் டயல் பங்குகளை, சந்தை வாயிலாக வாங்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இது கிட்டத்தட்ட 26 சதவீதமாகும். இப்படி இரு வழிகளில் பெரும்பான்மையான பங்குகளை வாங்குவதையடுத்து, ஜஸ்ட் டயல் நிறுவனம் ரிலையன்ஸ் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும். இருப்பினும், ஜஸ்ட் டயல் நிறுவனர் வி.எஸ்.எஸ்.மணி, நிர்வாக இயக்குனராகவும், தலைமை செயல் அதிகாரியாகவும் பணிகளை தொடருவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கையகப்படுத்துதல், பங்குதாரர்கள் மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகளின் ஒப்புதல் பெற்ற பிறகே நடைமுறைக்கு வரும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|