பதிவு செய்த நாள்
17 ஜூலை2021
19:24
புதுடில்லி:கடந்த 2020ம் ஆண்டு, ஓர் அசாதாரணமான ஆண்டாக இருந்ததாக, ‘வேதாந்தா’ நிறுவனத்தின் தலைவர் அனில் அகர்வால் தெரிவித்துள்ளார்.
கடந்த நிதியாண்டுக்கான அறிக்கையில், அனில் அகர்வால், பங்குதாரர்களுக்கு இவ்வாறு தெரிவித்து உள்ளார்.அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:கடந்த 2020ம் ஆண்டு, ஓர் அசாதாரணமான ஆண்டாக அமைந்துவிட்டது. வாழும் முறையில், நிறுவனங்களை நடத்துவதில் மிகப் பெரிய மாற்றம் நிகழ்ந்தது. வேதாந்தாவும் அதற்கு விதிவிலக்கல்ல.
மிகப் பெரிய இயற்கை வள நிறுவனம் என்ற வகையில், பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியதாயிற்று. இருப்பினும், மாறிவரும் யதார்த்தத்தை ஏற்று, பணியாளர்களின் இடைவிடாத ஆதரவுடன் சமாளித்தோம்.கொரோனாவை சமாளிக்க, 1,000 படுக்கை வசதிகளை ஏற்படுத்தியதுடன், 150 கோடி ரூபாய் உதவியும் வழங்கினோம்.
துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வாயிலாக, ஆக்சிஜனை தயாரித்து வழங்கினோம். தற்காலிக இடையூறுகள் இருந்தாலும், நிறுவனம் மீண்டும் வலுவாக எழும்.இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|