பதிவு செய்த நாள்
17 ஜூலை2021
19:25
புதுடில்லி:‘நார்த்தர்ன் ஆர்க் கேப்பிட்டல்’ நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக அனுமதி கோரி, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபியிடம் விண்ணப்பித்துள்ளது.
இந்த புதிய பங்கு வெளியீட்டின் போது, 300 கோடி ரூபாய்க்கு புதிய பங்குகளையும், நிறுவனர்கள் மற்றும் பங்குதாரர்களின் வசம் இருக்கும், 3.7 கோடி பங்குகளையும் விற்பனைக்கு விடுக்க இருக்கிறது.வங்கி சாரா நிதி நிறுவனமாக, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது, நார்த்தன் ஆர்க் கேப்பிட்டல் நிறுவனம்.
தனிப்பட்ட பங்கு ஒதுக்கீட்டின் வாயிலாக, 150 கோடி ரூபாய் நிதி திரட்டவும் இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. திரட்டப்படும் நிதியை, நிறுவனத்தின் மூலதன அடித்தளத்தை வலுவாக்கி கொள்ளவும்; எதிர்கால மூலதன தேவைகளுக்காக பயன்படுத்திக் கொள்ளவும் திட்டமிடப் பட்டு உள்ளது.இந்நிறுவனம், குறைந்த அளவிலான நிதி சேவைகளை பெற்றுவரும் குடும்பத்தினர் மற்றும் வணிகங்களுக்கு, தேவையான கடன்களை வழங்கி வருகிறது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|