பதிவு செய்த நாள்
20 ஜூலை2021
04:00
புதுடில்லி, : நாட்டின் சில்லரை விற்பனை, கடந்த ஜூன் மாதத்தில் 50 சதவீதம் அளவுக்கு சரிவைக் கண்டிருப்பதாக, சில்லரை விற்பனையாளர்கள் சங்கமான, ஆர்.ஏ.ஐ., தெரிவித்துள்ளது.
இது குறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது:கடந்த ஜூன் மாதத்தில், கொரோனா காரணமாக பல மாநிலங்களில் தடை உத்தரவுகள் நீட்டிக்கப்பட்ட காரணத்தால், இம்மாதத்தில் விற்பனை, கொரோனாவுக்கு முந்தைய, 2019 ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில், 50 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது.கடந்த ஜூன் மாதத்தில், விளையாட்டுகளுக்கான பொருட்கள் விற்பனையில் 66 சதவீதம் அளவுக்கு, மிக அதிகமான சரிவு ஏற்பட்டுள்ளது. வீட்டு உபயோக சாதனங்கள் விற்பனை, 46 சதவீதம் சரிவைக் கண்டு உள்ளது.
உணவுப் பொருட்கள் மற்றும் மளிகைப் பொருட்கள் விற்பனை 7 சதவீதமாக, மிக குறைந்த அளவிலான சரிவைக் கண்டுள்ளன.கிழக்கு பகுதிகளில் 55 சதவீதமும்; தெற்கு, மேற்கு பகுதிகளில் 50 சதவீதமும்; வடக்கில் 43 சதவீதமும், விற்பனையில் சரிவு காணப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|