புதிய நிறுவனங்கள் துவக்கம் ஜூன் காலாண்டில் அதிகரிப்பு புதிய நிறுவனங்கள் துவக்கம் ஜூன் காலாண்டில் அதிகரிப்பு ...  பசுமை ஹைட்ரஜன் ஆலை முதலில் அமைக்கிறது ஐ.ஓ.சி., பசுமை ஹைட்ரஜன் ஆலை முதலில் அமைக்கிறது ஐ.ஓ.சி., ...
ஒற்றைச்சாளர முறை விண்ணப்பம் தேவையற்ற விபரம் கேட்கக் கூடாது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜூலை
2021
19:07

சென்னை:புதிதாக தொழில் துவங்க, ஒற்றைச்சாளர முறையில் விண்ணப்பிக்கும் புதிய தொழில் முனைவோரிடம், தேவையற்ற விபரங்கள் மற்றும் ஆவணங்கள் கேட்கக் கூடாது என, தொழில் வணிக இயக்குனர் அறிவுறுத்தி உள்ளார்.

இது குறித்து தொழில்துறை அதிகாரிகள் கூறியதாவது:தமிழகத்தில் தொழில் புரிதலுக்கான நடைமுறைகளை எளிதாக்கவும், உள்நாடு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கவும், தமிழ்நாடு வணிக நடைமுறைகள் எளிதாக்கும் சட்டம் 2018ல் கொண்டு வரப்பட்டது.

இதன்படி, அனுமதி மற்றும் உரிமங்களை எளிதாகவும், வெளிப்படையான முறையில், காலக்கெடுவுக்குள் வழங்க வேண்டும்.சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களிடம் இருந்து, 1,314 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.இதில், 912 விண்ணப்பங்களில் மட்டுமே, குறித்த காலக்கெடுவுக்குள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பங்கள் மீது, உரிய அவகாசத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு வழங்கினால், இரண்டு மாதங்களுக்குள், அனைத்து சான்றிதழ்களையும் பெற்று, தொழில் துவங்க முடியும்.தேவையற்ற விபரங்கள் மற்றும் ஆவணங்கள் கேட்பதையும், உரிய காரணங்களின்றி விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதையும், காலக் கெடுவைத் தாண்டி, உரிய நடவடிக்கை எடுக்க தாமதிப்பதையும் தவிர்க்க முடியும்.

முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு, இணக்கமான தொழில் நடைமுறைச் சூழலை உருவாக்குமாறு, தொழில் வணிக இயக்குனர் அறிவுறுத்தி உள்ளார்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)