பதிவு செய்த நாள்
21 ஜூலை2021
19:48
புதுடில்லி:நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான, மாருதி சுசூகி இந்தியா, கிராமப்புற சந்தைகளில், இதுவரையிலான அதன் வாகன விற்பனை, 50 லட்சத்தை தாண்டி சாதனை புரிந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இது குறித்து விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் பிரிவின் மூத்த நிர்வாக இயக்குனர் ஷஷாங் ஸ்ரீவத்ஸ்வா கூறியதாவது:நிறுவனத்தின் மொத்த விற்பனையில் 40 சதவீதம், கிராமப்புறத்தை சேர்ந்ததாகும். உள்ளூர் முகவர்களுடனான கூட்டணியின் வாயிலாக, கிராமப்புறங்களில், 50 லட்சம் கார்களை விற்பனை செய்துள்ளோம்.உள்ளூர் சந்தைகளை அணுகும் கொள்கையுடன், இதற்காக பிரத்யேகமாக பயிற்சி பெற்ற, 12 ஆயிரத்து, 500 முகவர்களின் வாயிலாக இந்த சாதனையை புரிந்துள்ளோம்.இவ்வாறு தெரிவித்து உள்ளார்.
மாருதி சுசூகி நிறுவனம் துவங்கிய புதிதில், வெளிநாட்டு சந்தைகளில் அதிககவனத்தை கொண்டிருந்தது. பின் 2008லிருந்து, உள்நாட்டு சந்தையின் பக்கம் கவனத்தை திருப்பியது. இதனால் உலகளவில் பொருளாதார சரிவுகள் ஏற்பட்ட போதும், நிறுவனம் அதிக பாதிப்புக்கு ஆளாகாமல் இருந்தது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|