பதிவு செய்த நாள்
22 ஜூலை2021
20:20
புதுடில்லி:நடப்பு ஆண்டின் முதல் பாதியில், தனியார் பங்கு முதலீடு, துணிகர முதலீடு ஆகியவை, கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தைவிட 45 சதவீதம் உயர்ந்து, 2.02 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
தொழில்நுட்பம், மின்னணு வர்த்தகம், நிதிச் சேவைகள், மருந்து, கல்வி, ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு ஆகிய துறைகளில், அதிகளவில் முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டுஉள்ளன. உள்கட்டமைப்பு, ரியல் எஸ்டேட், சில்லரை விற்பனை, நுகர்வோர் பொருட்கள் ஆகிய துறைகளில் முதலீடுகள் குறைந்துள்ளன.இத்தகைய முதலீடுகள், கடந்த ஜூன் மாதத்தில், 22 சதவீதம் சரிவைக் கண்டுள்ளன.
இம்மாதத்தில் மொத்தம், 40 ஆயிரத்து 500 கோடி ரூபாய் அளவுக்கே முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. ஆனாலும் இது, இதற்கு முந்தைய மே மாதத்தை விட 33 சதவீதம் அதிகமாகும்.கொரோனா தாக்கம் குறைந்து வருவதை அடுத்து, முதலீடுகள் மேலும் அதிகரிக்கும் என கருதப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|