பதிவு செய்த நாள்
22 ஜூலை2021
20:26
புதுடில்லி:‘ஸ்டார் ஹெல்த் அண்டு அலைடு இன்சூரன்ஸ்’ நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’க்கு விண்ணப்பித்துஉள்ளது.
இந்நிறுவனம், இந்த பங்கு வெளியீட்டின்போது 2,000 கோடி ரூபாய்க்கு புதிய பங்குகளை வெளியிட இருக்கிறது. மேலும், நிறுவனர்கள் மற்றும் பங்குதாரர்கள் வசம் இருக்கும் 6.01 கோடி பங்குகளையும் விற்பனை செய்ய உள்ளது.மேலும், இந்த பங்கு வெளியீட்டின்போது, தகுதி வாய்ந்த ஊழியர்களுக்கு, குறிப்பிட்ட அளவிலான பங்குகளை ஒதுக்கீடு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.
திரட்டப்படும் நிதி, நிறுவனத்தின் மூலதன தேவைகளுக்காக பயன்படுத்தப்பட உள்ளது. தற்சமயம், ‘எஸ்.பி.ஐ., லைப் இன்சூரன்ஸ், எச்.டி.எப்.சி., லைப் இன்சூரன்ஸ், ஐ.சி.ஐ.சி.ஐ., புருடென்ஷியல் லைப் இன்சூரன்ஸ், ஐ.சி.ஐ.சி.ஐ., லொம்பார்டு ஜெனரல் இன்சூரன்ஸ்’ என சில நிறுவனங்களே பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|