பதிவு செய்த நாள்
22 ஜூலை2021
20:29
புதுடில்லி:‘வோடபோன் ஐடியா’ நிறுவனம், 15 ஆயிரம் கோடி ரூபாய் வரை அன்னிய நேரடி முதலீட்டை பெற்றுக்கொள்ள, அரசு அனுமதி அளித்துள்ளதாக செய்திகள் பரவிய நிலையில், இந்நிறுவன பங்குகள் விலை வர்த்தகத்தின் இடையே 6 சதவீதம் வரை அதிகரித்தது.
இது குறித்து, இத்துறையை சேர்ந்த ஒருவர் கூறியதாவது:நிதி திரட்டும் அறிவிப்பை, வோடபோன் ஐடியா நிறுவனத்தின் நிர்வாக குழு வெளியிட்டபோது, அதில் ஒரு குறிப்பிட்ட முதலீட்டாளரிடமிருந்து அதிகபட்சமாக 15 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டை பெற இருப்பதாக தெரிவித்திருந்தது.
இவ்வளவு பெரிய தொகை பெறும்போது அதற்கு அரசின் அனுமதி தேவைப்படும். அரசும் தற்போது அனுமதி வழங்கி விட்டதாக கூறப்படுகிறது.இந்த நிதி திரட்டலால், நிறுவனம் பாக்கி தொகைகளை செலுத்துவது, ஸ்பெக்ட்ரம் அலைவரிசைக்கு கட்டணம் செலுத்துவது, வழக்கமான செயல்பாடுகளில் முதலீடு செய்வது ஆகியவற்றை மேற்கொள்ள இயலும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|