பதிவு செய்த நாள்
22 ஜூலை2021
20:38
புதுடில்லி:கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில், மத்திய அரசின் கடன் உத்தரவாத திட்டத்தின் வாயிலாக, 53 லட்சம் கடன்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளன.
இந்த காலகட்டத்தில், கொரோனா இரண்டாவது அலை காரணமாக, சிறு வணிகங்கள் அதிக பாதிப்புக்கு உள்ளாயின என்பது குறிப்பிடத்தக்கது.கொரோனா பரவல் காரணமாக ஏற்பட்ட, பொருளாதார மந்தநிலை பாதிப்பிலிருந்து குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் மீள்வதற்கு உதவும் வகையில் நிதி தொகுப்பை, மத்திய நிதியமைச்சகம் அறிவித்து இருந்தது.
இந்த திட்டத்தின் கீழ், கடன் பெறும் நிறுவனங்கள், எந்த பிணையும் இன்றி கடன் பெற்றுக் கொள்ள வகை செய்யப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில், வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் வாயிலாக, 13 ஆயிரத்து 296 கோடி ரூபாய் மதிப்பிலான கடன்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|