பதிவு செய்த நாள்
22 ஜூலை2021
20:48
புதுடில்லி:இந்திய பத்திர சந்தையில், சில்லரை முதலீட்டாளர்களின் பங்கேற்பு, அண்மைக் காலமாக அதிகரித்து வருவதாக, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’யின் தலைவர் அஜய் தியாகி தெரிவித்துள்ளார்.
வங்கிகளின் குறைந்த வட்டி விகிதம் மற்றும் போதுமான பணப்புழக்கம் ஆகிய காரணங்களால், சில்லரை முதலீட்டாளர்கள், பத்திரங்களில் முதலீடு செய்வது அதிகரித்து உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் கூறியதாவது:கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில், மாதம் ஒன்றுக்கு சராசரியாக 24.5 லட்சம், ‘டிமேட்’ கணக்குகள் துவங்கப்பட்டு உள்ளன. கடந்த முழு நிதியாண்டில், சராசரியாக மாதம் ஒன்றுக்கு, 12 லட்சம் புதிய டிமேட் கணக்குகள் துவங்கப்பட்டுள்ளன. இந்த போக்கு, நடப்பு நிதியாண்டிலும் தொடர்ந்து, ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில், 24.5 லட்சமாக அதிகரித்துள்ளது.
நாட்டில் உள்ள மொத்த, ‘டிமேட்’ கணக்குகளின் எண்ணிக்கை, கடந்த நிதியாண்டின் துவக்கத்தில், 4.10 கோடியாக இருந்தது, நிதியாண்டின் இறுதியில், 5.5 கோடியாக உயர்ந்துள்ளது. இது, 34.7 சதவீத உயர்வாகும்.இது, முதலீடு செய்வதற்கான ஆர்வம் மக்களிடையே அதிகரித்து வருவதையே காட்டுகிறது.
குறிப்பாக, கடந்த நிதியாண்டிலிருந்து, பத்திரங்கள் சந்தையில் முதலீடு செய்வது அதிகரித்து வருகிறது. வட்டி விகிதம் கூட்டப்பட்டாலோ அல்லது பணப்புழக்கம் நெருக்கடிக்கு ஆளானாலோ, அது சந்தையில் பாதிப்பை ஏற்படுத்தும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|