கடன் உத்தரவாத திட்டத்தில் 53 லட்சம் கடன்களுக்கு அனுமதி கடன் உத்தரவாத திட்டத்தில் 53 லட்சம் கடன்களுக்கு அனுமதி ...  கைமாறும்  ‘அன்லிமிடெட்’ ‘வி- – மார்ட்’ வாங்குகிறது கைமாறும் ‘அன்லிமிடெட்’ ‘வி- – மார்ட்’ வாங்குகிறது ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
முதலீட்டாளரை ஈர்க்கும் இந்திய பத்திர சந்தை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2021
20:48

புதுடில்லி:இந்திய பத்திர சந்தையில், சில்லரை முதலீட்டாளர்களின் பங்கேற்பு, அண்மைக் காலமாக அதிகரித்து வருவதாக, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’யின் தலைவர் அஜய் தியாகி தெரிவித்துள்ளார்.

வங்கிகளின் குறைந்த வட்டி விகிதம் மற்றும் போதுமான பணப்புழக்கம் ஆகிய காரணங்களால், சில்லரை முதலீட்டாளர்கள், பத்திரங்களில் முதலீடு செய்வது அதிகரித்து உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் கூறியதாவது:கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில், மாதம் ஒன்றுக்கு சராசரியாக 24.5 லட்சம், ‘டிமேட்’ கணக்குகள் துவங்கப்பட்டு உள்ளன. கடந்த முழு நிதியாண்டில், சராசரியாக மாதம் ஒன்றுக்கு, 12 லட்சம் புதிய டிமேட் கணக்குகள் துவங்கப்பட்டுள்ளன. இந்த போக்கு, நடப்பு நிதியாண்டிலும் தொடர்ந்து, ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில், 24.5 லட்சமாக அதிகரித்துள்ளது.

நாட்டில் உள்ள மொத்த, ‘டிமேட்’ கணக்குகளின் எண்ணிக்கை, கடந்த நிதியாண்டின் துவக்கத்தில், 4.10 கோடியாக இருந்தது, நிதியாண்டின் இறுதியில், 5.5 கோடியாக உயர்ந்துள்ளது. இது, 34.7 சதவீத உயர்வாகும்.இது, முதலீடு செய்வதற்கான ஆர்வம் மக்களிடையே அதிகரித்து வருவதையே காட்டுகிறது.

குறிப்பாக, கடந்த நிதியாண்டிலிருந்து, பத்திரங்கள் சந்தையில் முதலீடு செய்வது அதிகரித்து வருகிறது. வட்டி விகிதம் கூட்டப்பட்டாலோ அல்லது பணப்புழக்கம் நெருக்கடிக்கு ஆளானாலோ, அது சந்தையில் பாதிப்பை ஏற்படுத்தும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)