‘ஸ்மார்ட் போன்’ விற்பனை 13 சதவீதம் சரிவு ‘ஸ்மார்ட் போன்’ விற்பனை 13 சதவீதம் சரிவு ...  அன்னிய முதலீடு அதிகரிக்கும் பியுஷ் கோயல் நம்பிக்கை அன்னிய முதலீடு அதிகரிக்கும் பியுஷ் கோயல் நம்பிக்கை ...
வர்த்தக வெளிப்படைத் தன்மையில் இந்தியாவுக்கு 100 மதிப்பெண்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜூலை
2021
20:51

புதுடில்லி:‘டிஜிட்டல்’ மற்றும் நிலையான வர்த்தக வசதி குறித்த உலகளாவிய ஆய்வில், 90.32 சதவீத மதிப்பெண்ணுடன், இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை கண்டுள்ளது.

மேலும், வெளிப்படைத் தன்மை குறித்த விஷயத்தில் 100 சதவீத மதிப்பெண் பெற்றுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின், ஆசியா மற்றும் பசிபிக் நாடுகளுக்கான பொருளாதார மற்றும் சமூக ஆணையம் தன்னுடைய உலகளாவிய ஆய்வின் முடிவில் இவ்வாறு தெரிவித்துள்ளது.

ஆணையம் மேலும் தெரிவித்துள்ளதாவது:உலகின் 143 நாடுகள் குறித்த மதிப்பீட்டில் வெளிப்படைத்தன்மை, நடைமுறைகள், நிறுவன ஏற்பாடு மற்றும் ஒத்துழைப்பு, காகிதமற்ற வர்த்தகம் மற்றும் பிற நாடுகளுக்கு இடையேயான காகிதமற்ற வர்த்தகம் ஆகிய ஐந்து முக்கிய விஷயங்களிலும், இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை கண்டுள்ளது.

டிஜிட்டல் மற்றும் நிலையான வர்த்தக வசதி குறித்த உலகளாவிய ஆய்வில், இந்தியா கடந்த 2019ம் ஆண்டில், 78.49 சதவீத மதிப்பெண் பெற்றிருந்த நிலையில், நடப்பாண்டில், 90.32 சதவீத மதிப்பெண் பெற்று உள்ளது. வெளிப்படைத் தன்மை குறித்த விஷயத்தில், இந்தியா 100 சதவீத மதிப்பெண் பெற்றுள்ளது.

2019ல் இது, 93.33 சதவீதமாக இருந்தது.காகிதமற்ற வர்த்தகத்தில் 96.3 சதவீதமும், நிறுவன ஏற்பாடு மற்றும் ஒத்துழைப்பில் 88.89 சதவீதமும் பெற்றுள்ளது.இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.இந்த ஆய்வு, இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை எடுக்கப்படுவதாகும்.அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள், இந்த ஆய்வில் நேரடியான விளைவுகளை ஏற்படுத்தி, முன்னேற்றத்தை எடுத்துக் காட்டி உள்ளது என, மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)