பதிவு செய்த நாள்
24 ஜூலை2021
22:18
மும்பை:வங்கிகள், அதன் நிர்வாக குழுவின் அனுமதியை பெறாமலேயே, பிற வங்கிகளின் இயக்குனர்களுக்கு 5 கோடி ரூபாய் வரை தனிநபர் கடன் வழங்கலாம் என, ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இதற்கு முன்பாக, 25 லட்சம் ரூபாய் வரை மட்டுமே வழங்க முடியும் என்றிருந்த நிலையில், அதை தற்போது 5 கோடி ரூபாயாக அதிகரித்து அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும், வங்கிகள் நிர்வாக குழுவின் முன் அனுமதி இன்றி, அதன் தலைவர் அல்லது நிர்வாக இயக்குனர் அல்லது இயக்குனர்களின் மனைவி அல்லது மைனர் குழந்தைகள் தவிர வேறு உறவினர்கள் யாருக்கும், 5 கோடி ரூபாய்க்கு மேல், கடன் வழங்கக் கூடாது என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது.
இதற்கு முன்பாக, கடந்த 2015 ஜூலையில், வங்கிகளின் இயக்குனர்கள் அல்லது இயக்குனர்களின் உறவினர்களுக்கு கடன் வழங்குவதில் சில கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி கொண்டுவந்தது குறிப்பிடத்தக்கது.அப்போது 25 லட்சம் ரூபாய்க்கு மேல், நிர்வாக குழு அனுமதி இன்றி கடன் கொடுக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டு இருந்தது. அது இப்போது 5 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|