பதிவு செய்த நாள்
24 ஜூலை2021
22:24
மும்பை:மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு, 235.11 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்து, சாதனை உயரத்தை தொட்டுள்ளது.
கடந்த வியாழன், வெள்ளி ஆகிய இரண்டு சந்தை நாட்களில் மட்டுமே, பி.எஸ்.இ., எனும் மும்பை பங்குச் சந்தையில், முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு, 4 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு அதிகரித்ததும் குறிப்பிடத்தக்கது.வங்கி, நுகர்வோர் பொருட்கள் மற்றும் நிதி ஆகிய துறைகளை சேர்ந்த பங்குகள் விலை, 1.46 சதவீதம் அளவுக்கு அதிகரித்து, ஏற்றத்துக்கு வழிவகுத்து கொடுத்துள்ளது.
இருப்பினும், மூலதன பொருட்கள், தொலைதொடர்பு, வீட்டு உபயோக சாதனங்கள் ஆகிய துறைகளை சேர்ந்த பங்குகள், 0.85 சதவீதம் அளவுக்கு சரிவைக் கண்டுள்ளன.உள்நாட்டு முதலீட்டாளர்கள் அதிகளவில் முதலீடுகளை மேற்கொண்டதும், உலகளவிலான சந்தைகளில்,‘ரிஸ்க்’ அதிகரித்து உள்ளதும், இந்திய சந்தைகளில் முதலீடுகள் அதிகரிக்க காரணமாக அமைந்தன என, சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|