‘பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளின் பலன் அனைவருக்கும் சமமானதாக இல்லை’ ‘பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளின் பலன் அனைவருக்கும் சமமானதாக ... ...  உங்கள் வேலைவாய்ப்பை   பாதுகாத்து கொள்வது எப்படி? உங்கள் வேலைவாய்ப்பை பாதுகாத்து கொள்வது எப்படி? ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
காருக்கான இறக்குமதி வரி குறைக்க கோரும் எலன் மஸ்க்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜூலை
2021
22:26

புதுடில்லி:அமெரிக்காவைச் சேர்ந்த, மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான, ‘டெஸ்லா’, அதன் மின்சார கார்களுக்கு இந்தியாவில் இறக்குமதி வரியை குறைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது.

முழுமையாகக் கட்டமைக்கப்பட்டு இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு, சுங்க வரியாக 60 சதவீதத்திலிருந்து, 100 சதவீதம் வரை விதிக்கப்படுகிறது. இது காரின் என்ஜின் அளவு, காப்பீடு மற்றும் விலையை பொறுத்து நிர்ணயிக்கப்படுகிறது. இந்நிலையில், டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான எலன் மஸ்க், தற்காலிக நிவாரணமாவது கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும், அவ்வாறு கிடைத்தால் அது பாராட்டப்படத்தக்கது என்றும் தெரிவித்துள்ளார்.

உலகத்திலேயே இந்தியாவில் தான் இறக்குமதி வரி அதிகமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.மேலும், இந்தியாவில் இறக்குமதி செய்து வெற்றி பெறும்பட்சத்தில், அடுத்ததாக தொழிற்சாலை அமைத்து தயாரிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். சமீபத்தில், ‘டெஸ்லா இந்தியா மோட்டார்ஸ் அண்டு எனர்ஜி’ எனும் பெயரில் ஒரு நிறுவனத்தை பதிவு செய்து, பெங்களூரில் தன்னுடைய அலுவலகத்தை துவங்கியது

டெஸ்லா.அடுத்த ஐந்து ஆண்டுகளில், மின்சார வாகனங்கள் தயாரிப்பில் இந்தியா முக்கியமான இடத்தை பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, உலக அளவிலான பல முன்னணி நிறுவனங்களின் பார்வை இந்தியாவின் பக்கம் திரும்பி உள்ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)