பதிவு செய்த நாள்
24 ஜூலை2021
22:26
புதுடில்லி:அமெரிக்காவைச் சேர்ந்த, மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான, ‘டெஸ்லா’, அதன் மின்சார கார்களுக்கு இந்தியாவில் இறக்குமதி வரியை குறைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது.
முழுமையாகக் கட்டமைக்கப்பட்டு இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு, சுங்க வரியாக 60 சதவீதத்திலிருந்து, 100 சதவீதம் வரை விதிக்கப்படுகிறது. இது காரின் என்ஜின் அளவு, காப்பீடு மற்றும் விலையை பொறுத்து நிர்ணயிக்கப்படுகிறது. இந்நிலையில், டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான எலன் மஸ்க், தற்காலிக நிவாரணமாவது கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும், அவ்வாறு கிடைத்தால் அது பாராட்டப்படத்தக்கது என்றும் தெரிவித்துள்ளார்.
உலகத்திலேயே இந்தியாவில் தான் இறக்குமதி வரி அதிகமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.மேலும், இந்தியாவில் இறக்குமதி செய்து வெற்றி பெறும்பட்சத்தில், அடுத்ததாக தொழிற்சாலை அமைத்து தயாரிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். சமீபத்தில், ‘டெஸ்லா இந்தியா மோட்டார்ஸ் அண்டு எனர்ஜி’ எனும் பெயரில் ஒரு நிறுவனத்தை பதிவு செய்து, பெங்களூரில் தன்னுடைய அலுவலகத்தை துவங்கியது
டெஸ்லா.அடுத்த ஐந்து ஆண்டுகளில், மின்சார வாகனங்கள் தயாரிப்பில் இந்தியா முக்கியமான இடத்தை பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, உலக அளவிலான பல முன்னணி நிறுவனங்களின் பார்வை இந்தியாவின் பக்கம் திரும்பி உள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|