பதிவு செய்த நாள்
27 ஜூலை2021
19:33
புதுடில்லி:வாகன உதிரி பாகங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும், ‘ரோலக்ஸ் ரிங்ஸ்’ நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு இன்று துவங்கி, 30ம் தேதி முடிவடைகிறது.
குஜராத் மாநிலம், ராஜ்கோட் நகரைச் சேர்ந்த ரோலக்ஸ் ரிங்ஸ் நிறுவனம், வாகனங்களுக்கு தேவையான வார்ப்படங்கள் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பில், இந்தியாவில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. இந்நிறுவனம், அதன் நடைமுறை மூலதன தேவைகளுக்கும், நிர்வாகச் செலவினங்களுக்கும் பங்கு வெளியீட்டில் களமிறங்கி, 731 கோடி ரூபாய் திரட்ட உள்ளது.
இதில் மொரீஷியசின், ரிவென்டல் பி.இ., எல்.எல்.சி., நிறுவனத்தின், 75 லட்சம் பங்குகளும், 56 கோடி ரூபாய் மதிப்பிற்கு புதிய பங்குகளும் விற்பனை செய்யப்பட உள்ளன. ஒரு பங்கின் குறைந்தபட்ச விலை, 880 ரூபாய்; அதிகபட்ச விலை, 900 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம், 16 பங்குகள் மற்றும் அதன் மடங்குகளில் விண்ணப்பிக்கலாம்.
பங்கு வெளியீட்டில், சில்லரை முதலீட்டாளர்களுக்கு, 35 சதவீதம் ஒதுக்கப்பட்டுள்ளது.பங்கு ஒதுக்கீடு, ஆக., 4ம் தேதி; மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில், ஆக., 7ல் பங்குகள் பட்டியலிடப்பட உள்ளன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|