தமிழகம் ரூ.412 கோடி  காபி ஏற்றுமதி தமிழகம் ரூ.412 கோடி காபி ஏற்றுமதி ...  கொரோனா காப்பீடு செய்தோருக்கு  ரூ.8,000 கோடி தந்த நிறுவனங்கள் கொரோனா காப்பீடு செய்தோருக்கு ரூ.8,000 கோடி தந்த நிறுவனங்கள் ...
கொரோனா காப்பீடு செய்தோருக்கு ரூ.8,000 கோடி தந்த நிறுவனங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஜூலை
2021
21:17

புதுடில்லி:நடப்பு, 2021 – 22ம் நிதியாண்டின் ஏப்., – ஜூன் வரையிலான காலாண்டில், மருத்துவ காப்பீடு செய்தோருக்கு, சிகிச்சை செலவாக, 16 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை, காப்பீட்டு நிறுவனங்கள் வழங்கியுள்ளன.

இதில், கொரோனா மருத்துவ சிகிச்சைக்காக, 8 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை, காப்பீடுதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து எச்.டி.எப்.சி., எர்கோ ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ரிதேஷ் குமார் கூறியதாவது: கொரோனா இரண்டாவது அலையால், மருத்துவ காப்பீடுதாரர்களின் கோரிக்கை அதிகரித்துள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், 10 லட்சத்திற்கும் அதிகமான கோரிக்கைகள் வந்துள்ளன.

இது, கடந்த முழு நிதியாண்டில் வந்த அளவிற்கு நெருக்கமாக உள்ளது. மருத்துவ காப்பீட்டு நிறுவனங்கள், முதல் காலாண்டில், 16 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை, காப்பீட்டுதாரர்களுக்கு வழங்கியுள்ளன.இதில், 8 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேலாக, கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்றதற்காக வழங்கப்பட்டுள்ளது. இன்னும், 25 சதவீத காப்பீட்டு கோரிக்கைகள் வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

‘பாலிசி பஜார்’ மருத்துவ காப்பீட்டு பிரிவு தலைவர் அமித் சாப்ரா கூறியதாவது: கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில், மருத்துவ செலவின கோரிக்கைகளில், கொரோனா பிரிவு, மூன்றில் ஒரு பங்கு என்ற அளவிற்கு தான் இருந்தது. இது, மூன்றாவது காலாண்டில், 31 சதவீதமாகவும், நான்காவது காலாண்டில், 14 சதவீதமாகவும் சரிவடைந்தது.

இந்நிலையில் தான், கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவியது. இதனால், இந்தாண்டு ஏப்., – ஜூன் காலாண்டில், கொரோனா பிரிவு காப்பீட்டு கோரிக்கை, 50 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. ஊரடங்கால் விபத்துகள் குறைந்ததும், ஏராளமானோர் பிற நோய்களுக்கான சிகிச்சையை தள்ளிப் போட்ட காரணத்தால், மருத்துவ காப்பீட்டு கோரிக்கைகளில் பிற பிரிவுகளை விட கொரோனாவுக்கான ஒதுக்கீடு அதிகரித்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

வேகமான வளர்ச்சி

கடந்த, 2019 – 20ம் நிதியாண்டில், மருத்துவ காப்பீட்டு துறையின் பிரிமியம் வருவாய், 51 ஆயிரத்து, 674 கோடி ரூபாயாக இருந்தது. இது, 2020 – 21ம் நிதியாண்டில், 58 ஆயிரத்து, 572 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)